Add this page to Favorites! அன்பார்ந்த வாசர்களே தங்களது வருகைக்கு நன்றி ! இந்த வலை தளத்தை தங்களது Favourite பகுதியில் Book Mark செய்து கொள்ளவும். மருத்துவ சம்பந்தமான கட்டுரைகள் தொடர்ந்து வெளியடப்படும். தங்களது ஆரோகியமான ஆக்கபூர்வமான கருத்துக்களை கருத்துரை பகுதியில் வெளியிடவும். அறிவோம் மருத்துவம்: மார்ச் 2009
இவ்வுலக வாழ்க்கை உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய வசதிவாய்ப்புகளும், பகட்டணிகலன்களுமே ஆகும். அல்லாஹ்விடத்தில் உள்ளவை மேலானாவையும் நிலையானவையும் ஆகும். (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" அல்குர்ஆன் 28:60

திங்கள், 30 மார்ச், 2009

சொரியாசிஸ்

சொரியாசிஸ் (Psoriasis) என்றால் என்ன ?

  • சொரியாசிஸ் என்பது ஒரு சாதாரணமான தோல் அழற்சி நிலையாகும். மக்கட்தொகையில் 1% - 2% மக்கள் இதனால் தாக்கப்படுகிறார்கள்.
  • தோலில் உள்ள உயிரணுக்கள் வேகமாகப் பிரிவதன் மூலம் இது உண்டாகும். இதன் விளைவாக தோல் மந்தமாகிவிடும், புரையோடும்.
  • தோலிலுள்ள அதிகரிக்கப்பட்ட பல சிறு இரத்த நாளங்கள் வீங்கிவிடுவதால் தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.

சொரியாசிஸ் எவ்வாறு காணப்படும் ?

  • சொரியாசிஸ் என்பது தோலில், பொடிந்து விழும் புரையுடன் கூடிய சிவப்பு திட்டுகிகளாகக் (patches) காணப்படும்.
  • உடலின் எந்தப்பாகமும் தாக்கப்படலாம்.
  • முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் சாதாரணமாகப் பாதிக்கப்படும்.

சொரியாசிஸ் தொற்றும் தன்மையுடைத்ததா ?

  • சொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது மற்றவர்களுக்குப் பரவாது.
  • குறைந்த சுகாதாரத்தின் காரணமாக இது ஏற்படாது.

சொரியாசிஸை எது ஏற்படுத்தும் ?

  • சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சூழல் நிலை இவற்றின் இணைப்பினால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது.
  • சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 1/4 - 1/3 பங்கினர் அதே நோயுடைய குடும்பத்திலிருந்து வந்தவர்களே ! சிலர் விசயங்களில் மரபு நிலை பங்காற்றுகிறது.
  • உடல், மன அழுத்தங்கள், குரல்வளை தொற்று, ப்ளூ, ஸ்டீராய்ட் உறார்மோன்ஸ், சில ஆண்ட்டிஹைபர் டென்
    சிவ் போன்ற சிப மருந்துகள், சொரிமாகிஸை மேலும் மோசமாக்கும்.
  • குடிபழக்கம், புகைபிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கி, குணப்படுத்த கடினமாக்கும்.

சொரியாசிஸ் பிற சூழ்நிலைகளுடன் தொடர்புடையதா ?

  • ஏறத்தாழ 5% சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் ஏற்படும்.
  • சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், வண்ணமாற்றத்தையும், நகங்கள் தடிப்பையும் ஏற்படுத்தும்.

சொரியாசிஸ் யாருக்கு வரும் ?

  • சொரியாசிஸ் ஆண், பெண் இருவரையும் சமமாகத் தாக்கும்.
  • சொரியாசிஸ் வழக்கமாக 20 வது வயதில் தாக்கத் தொடங்கும். பிறப்பிலிருந்தும் முதிய வயதிலும் கூட இது வரலாம்.
  • ஒரு முறை சொரியாசிஸ் வந்ததும், குறைதல், தணிதல், அதிகரித்தல் என பல்வேறு கால மாற்றங்கள் ஏற்படும்.

சொரியரிசிஸ§க்கு என்ன மருத்துவங்கள் கிடைக்கின்றன ?


1. மேற்பூச்சுக்கள் (
creams)

  • இவற்றுள், ஈரப்படுத்துவன (mositurisers), கரி எண்ணை டித்ரானால் (dithranol), கால்சிபாட்ரியல் (calcipatriol) டாபிகல் ஸ்டீராய்ட்ஸ் அடங்கும்.
  • சொரியாசிஸால்கள் பெரும்பாலான மக்கள் லேசான நோயைப் பெற்று, டாபிகல் கிரீம்களைப்பயன்படுத்துவதால் நல்ல நிவாரணத்தைப் பெறுகிறார்கள்.

2. போட்டோதெரபி

  • அல்ட்ரா வைலட் ஒளிக்கதிர் மருத்துவத்தால் சொரியாசிஸ் நன்கு குணமாகும்.
  • அல்ட்ரா வைலட் ஒளி அது ஹிக்ஷிஙி அல்லது ஹிக்ஷிகி இருந்தாலும்சரி, தொடர்ந்து பல மாதங்கள், மருத்துவம் செய்துகொண்டால், சொரியாசிஸை நன்கு குணப்படுத்தலாம்.

3. மருந்துகள்

  • தீவிர சொரியாசிஸ§க்கு, உங்கள் தோல்துறை வல்லுனர் வாய்வழி கொள்ளும் மெதாட்டுரக்ஸாட் (methotrexate) அசிட்ரெடின், சைக்ளோஸ்போரின், சல்பா சலாஜைன் போன்ற மருந்துவில்லைகளை எழுதித்தரலாம்.
  • இத்தகைய மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நோயாளிகள் இந்தப் பக்க விளைவுகளைப் பரிசோதித்துக் கொள்ள அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை

  • தோலைச் சொரியாதீர்கள் ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும்.
  • மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள் ஆகுமாதலால் மருத்துவத்தை விரைவில், இடையில் நிறுத்திவிடாதீர்கள்.
  • சொரியாசிஸைக் குணப்படுத்த எழுதித்தரப்பட்ட மருந்து வில்லைகளையும், மருந்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் மோசமாகும்.
  • மருத்துவத்தைத் தொடர்ந்து சீராக எடுத்துக்கொள்ளுங்கள்.
  • தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், புரையேற்படுவதையும் தடுக்கும்.
  • சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும்.
  • மன அழுத்தம் சொரியாசிஸைத் தீவிரப்படுத்தும். அமைதியாக யிருக்க, உடற்பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக்கொள்ளவும், விருப்பு எடுத்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

வெள்ளி, 27 மார்ச், 2009

ஆஸ்த்துமா என்பது என்ன ?

பத்மா அர்விந்த்

Aasthmaஆஸ்த்மா நுரையீரல்கள பாதிக்க கூடிய ஒரு நோய். குழந்தைகளை அதிகம் பாதிக்க கூடிய ஒரு நோய். இதனால் அடிக்கடி இழுப்பு, சுவாசிக்க முடியாத நிலை, மார்பு கூட்டில் ஒரு இறுக்கம், இருமல் போன்றவை வரும். எப்போதுமே ஆஸ்த்மா இருந்தாலும் ஒவ்வாமை ஏர்படும் போது இதன் தீவிரம் அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் ஆஸ்த்மா இருந்தால் வரக்கூடிய வாய்புகள் அதிகம் என்றாலும் ஆஸ்த்மா வருவதற்கு என்ன முக்கிய காரணம் என்பது இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளப்படவில்லை. அதேபோல இதை முற்றிலும் குணப்படுத்துதலும் முடியாது. மருந்துகளால் ஒருவித கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமே அன்றி குணப்படுத்துதல் இயலாது. கட்டுப்பாடில் இருக்கும் போது இழுப்பு, மூச்சு திணரல் வராமல் இருக்கும். நன்றாக தூங்க முடியும் என்பதால் பள்ளிக்கு செல்வதோ விளையாடுவதோ தடை படுவதில்லை.

ஆஸ்த்மாவின் விளைவுகள்: அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு 12 மில்லியன் குழந்தைகள் ஆஸ்த்மா பாதிப்பால் தாக்கப்பட்டார்கள் (asthma aatack). கிட்டதட்ட 21 மில்லியன் பேர் ஆஸ்த்மா வால் சிரமப்படுகிறார்கள். பெற்றோருக்கு ஆஸ்த்மா இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வர 6 மடங்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது.

ஆஸ்த்மாவை கண்டறியும் வழிகள்: ஆஸ்த்மாவை கண்டறிவது மிக கடினம். அதுவும் 5 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் கண்டறிவதும் இன்னும் கடினம். மருத்துவ பரிசோதனைக்கு செல்லும்போது மருத்துவர் கேட்கும் சில கேல்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலை வத்தே கண்டறிய முடியும். அதன்பின் நுரையீரல் பரிசோதனை செய்து அதை ஊர்ஜிதம் செய்துகொள்வார்கள்.

பரிசோதனை செய்யும் மருத்துவர் இரவில் மூச்சுதிணறல் இருக்கிறதா, வீட்டில் யாருக்கேனும் ஆஸ்த்மா இருக்கிறதா, மார்பு தசைகளில் இறுக்கமான உணர்வு இருக்கிறதா என்று கேட்பார். ஸ்பைரோமீட்டர் என்ற குழாய் மூலம் அதிகப்படியாக உங்களால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியும் என்பதையும் பார்க்க முடியும். இந்த காற்று அளவு ஆஸ்த்மா மருந்து எடுத்து கொள்வதற்கு முன், மருந்து எடுத்து கொண்டதன் பின் கணக்கிட்டு பார்க்க படும். அதிக முறை ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும் போது அது ஆஸ்த்மாவாக மாற வாய்ப்பு இருக்கிறது. காற்று மூச்சுக்குழாய்கள் மூலம் நுரையீரலுக்குள் சிறிய குழாய்கள் மூலம் செல்லுகிறது. ஆஸ்த்மா விளைவு ஏற்படும் போது அந்த குழாய்கள் சுருங்கிவிடுவதால் தேவையான காற்று செல்ல முட்யாமல் தடைபடுகிறது. அதிக முயுக்கஸ் எனப்படும் திரவம், சளி சுரந்து இருமலை இன்னும் அதிகமாக்கும். பிறகு இது மூச்சு இழுப்பில் முடியும். சிலசமயம் தக்க மருந்து கொடுத்து மூச்சு குழாய்களை விரிவாக்க முடியாவிட்டால், இறக்கவும் நேரிடும்.

ஆஸ்த்மா வரக்காரணங்கள்: சுற்றுப்புர சூழலில் உள்ள மாசு, சிகரெட் புகை போன்றவை முக்கிய காரணங்களாகும். அமெரிக்கா போன்ற நகரங்களில் குளிர்காலம் முழுதும் சன்னல்கள் போன்றவை திறக்கப்படுவதில்லை என்பதால் சுழலும் காற்றில் மாசு, நுண்ணுயிர்கள் இவை வெளியேற வாய்ப்பு இருப்பதில்லை.

ஆஸ்த்மாவை எப்படி கட்டுபாட்டில் வைத்திருப்பது?

மருத்துவர் தரும் மருந்துகளை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள். அதேபோல சுற்றுப்புரத்தில் உள்ள மாசினை தவிர்க்க கூடிய மட்டும் முயற்சி செய்யுங்கள். வீட்டில் புகை பிடிப்பவர்கள் இருப்பின் வெளியே சென்று புகை பிடித்தல், அல்லது வீட்டு சன்னல்களை திறந்து வைத்தல் போன்றவற்றை செய்யவும். ஆஸ்த்மாவிற்கு சில மாத்திரைகள் அல்லது ஒரு மூச்சு இழுக்கும் குப்பியிலோ மருந்து இருக்கும். பெரும்பாலும் இவை மூச்சு குழாய்களை விரிவாக்கும் மருந்துகளே. அடிக்கடி உபயோகிக்காமல் தேவைக்கேற்ப மருத்துவ ரின் அறிவுறையை பின்பற்றி கட்டுப்பாட்டுள் வைத்திருங்கள்.

முக்கிய காரணிகள்:

சூழலில் உள்ள சிகரெட் புகையின் மாசு; ஆஸ்த்மா உள்ளவர்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர் அருகாமையில் புகைப்பதை தவிர்க்க வேண்டும்.

தூசி: தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் இவற்றை அடிக்கடி துவைத்து உபயோகிக்க வேண்டும். அதேபோல stuffed animal விளையாட்டு பொம்மைகள் கொடுக்காதீர்கள். வீட்டிற்கு வெளியே காற்றில் உள்ள மாசு: சில நிறுவனங்கள் வெளியேற்றும் புகை, கார் போன்ற வாகனங்களில் வெளியிடும் புகை போன்றவை ஆஸ்த்மா உள்ளவருக்கு ஆபத்தை வரவழைக்க கூடும்.

கரப்பான் பூச்சிகள் அடைசல் அதிகம் இருக்கும் இடத்தில் நிறைய இருக்கும். இவற்றை கொல்ல பயன் படுத்தும் மருந்தின் வீரியம் ஆஸ்த்மாவை வரவழைக்கூடியது. அதனால் வீட்டில் நீர் தேங்கி இருக்கும் இடங்களை சுத்தம் செய்து துப்புரவாக வைத்திருத்தல் அவசியம்.

செல்ல பிராணிகள் பூனை, நாய் போன்ற இவற்றின் முடி பலருக்கு ஒவ்வாமை தரக்கூடியது. பிறகு அது ஆஸ்த்மாவில் கொண்டு விடும். எனவே எவ்வளவுதான் நண்பனாக இருந்தாலும் அதிக முடி உள்ள செல்ல பிராணிகலை படுக்கை அறையில் அனுமதிக்காதீர்கள். அடிக்கடி வீட்டை சுத்தம் செய்து முடியை அகற்றுவது முக்கியம்.

பாசி : பாசி, மோல்ட் இவற்றை சுவாசிப்பதன் மூலம் அதிக ஆஸ்த்மா விளைவுகள் நேரலாம். வீட்டில் அதிக ஈரப்பதம் இல்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். எங்கேயாவது தண்ணீர் கசியுமானால் அதை உடனே சரி செய்ய வேண்டியது அவசியமாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் C அதிகம் உள்ள பழங்களை உண்பது அவசியம்.

புதன், 25 மார்ச், 2009

ஒற்றைத் தலைவலி (Migraine)

உலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகும் வாய்ப்பு இதனால்தான் உருவாகிறது.

அறிகுறிகள்:

மைக்ரேன் ஒரே பக்கமாக வலிக்கக் கூடிய தலைவலி என்றாலும், தலை முழுவதும் வலி தெரியும். தலையின் மேல் பகுதியிலோ, பக்கவாட்டிலோ துடிப்பது போலவும் அடித்துக் கொள்வது மாதிரியும் லேசாக வலி ஆரம்பிக்கும்.

படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். ஒலியைக் கேட்கவோ, ஒளியைப் பார்க்கவோ கூச்சமாக இருக்கும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும்.

வகைகள்

ஒற்றைத் தலைவலி இரண்டு முக்கிய வகைகளில் அறியப்படுவதாக உள்ளது.

1. கிளாசிக் மைக்ரேன் (Classic Migraine)

தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை (avra) இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது.

தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும்.

நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு.

கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்தவலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.

பொதுவான மைக்ரேன்: (Common migraine)

மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.

ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?

மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன. பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

ஒற்றைத்தலைவலி பரம்பரை நோயா?

ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. கணவன்_மனைவி இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால் பிள்ளைகளுக்கு 75% வாய்ப்பு உண்டு. இருவரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50% வாய்ப்புகள் உண்டு. அவ்வளவுதான். மற்றபடி, கட்டாயம் வரும் என்று சொல்லமுடியாது.

விடுதலைபெற நம்பிக்கையான வழிகள்:

அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். இதற்குப் பல வழிகள் இருந்தாலும் உங்களுக்கு உதவ சிலவழிகள்.

1. உணவுமுறையில் மாற்றம்:

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.

2. முறையான தூக்கம்:

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.

3. உடற்பயிற்சி:

உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.

4. சுற்றுச்சூழலில் கவனம்:

அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.

5. மது, புகை, காபி தவிர்த்தல்

மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.

6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம்.

அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.

7. தடுப்புமுறைகள்:

ஒற்றைத்தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.

8. மருந்துகள்:

அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்து வர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

இளமை காக்க ஆறு யோசனைகள் !

மன்னிப்பது நல்லது!

பிறரைக் குறை கூறிக்கொண்டோ அல்லது திட்டிக் கொண்டே தங்கள் வேலைகளை நாள் முழுவதும் சிலர் பார்ப்பார்கள். இவர்களுக்கு வயிறு சம்பந்தமான கோளாறுகள் வரும். இந்தக் கோளாறு இருந்தால் உங்களுக்குக் கெடுதல் செய்தவர்களை உடனடியாக மனப்பூர்வமாக மன்னித்து மறந்துவிடுங்கள். மருந்து இன்றியே வயிற்றுக் கோளாறுகள் இதனால் விரைந்து குணமாகும் நம்புங்கள்.

வாந்தி வருவது போல் இருந்தால்…

வயிற்றுக் கோளாறுகளை முன்கூட்டியே தடுக்க ஒவ்வொரு வேளை உணவிற்குப் பிறகும் உலராத ஓர் இஞ்சித்துண்டு சாப்பிடவும். இதே போல வாந்தி வருவதை நிறுத்த உலர்ந்த சிறிய இஞ்சித்துண்டை உப்புடன் சாப்பிடவும். எப்படிப்பட்ட வாந்தியும் உடனே அமைதியாகி ஓயும்.

உடல் நாற்றம் நீங்க…

மழைக்காலத்தில் வேப்ப இலையை அரைத்து இரண்டு டீஸ்பூன் அளவு அந்தத் துவையலை குளிக்கும் தண்ணீரில் கலக்கிவிட்டுக் குளிக்கவும். இது உடல் நாற்றத்தைப் போக்கும் (வேப்ப எண்ணெய்தான் நாறும்). தோலில் எரிச்சல் குணமாகும். வீட்டில் பூச்சிகள் இருந்தால் அது உங்களைக் கடிக்காது.

விரல் சுட்டுவிட்டால்!

சூடான பாத்திரங்களை அடுப்பில் இருந்து இறக்கும்போது விரல்கள் சுட்டுவிட்டால் ஐஸ் துண்டுகளை அந்த இடத்தில் வைக்கவும். இதனால் கொப்பளமும் வராது. ரெப்ரிஜிரேட்டர் இல்லாதவர்கள் உடனடியாகப் பக்கத்து வீட்டிலாவது ஐஸ் துண்டுகளைப் பெறுவது நல்லது.

திரைப்படப் பாடல்களால் உடல் நலம் உண்டு!

நல்ல உடல் நலம்இ நல்ல மனவளம் ஆழ்ந்த அமைதி எளிதில் ஓய்வு எடுக்க ஆழ்ந்த தியானம் செய்ய படுத்து உடனே தூங்க 1250 ரூபாயில் ஒரு காம்பாக்ட் டிஸ்க் வந்துள்ளது. இதில் கர்நாடக இசைதான் உள்ளது. ஆன்ட்ருவெல் என்பவர் ஆராய்ந்து ஒலிப்பதிவு செய்த இசைத்தொகுப்பு இது.

மறதி வியாதி மறைய…
வயதானவர்களுக்கு வரும் மறதியிலிருந்து விடுபடத் தினமும் வைட்டமின் ‘ஈ’ மாத்திரையைச் சாப்பிட வேண்டும். அளவு : 2000 சர்வதேச யூனிட்டுகள். சற்று அதிகமாகச் சாப்பிட்டாலும் கெடுதல் இல்லையாம். ஆனால் டாக்டர்தான் மாத்திரை அளவை முடிவு செய்ய வேண்டும். அமெரிக்காவில் உள்ள தேசிய முதியோர் நல அமைப்பினர் இரண்டு ஆண்டுகளாக இதே அளவு கொடுத்துவந்தால் பல ஞாபக மறதி நோய்க்காரர்கள் நன்கு குணம் பெற்றனர்.

வாழ நினைத்தால் வாழ முடியும்!

குண்டு பாய்ந்தும் 76 வயது வரை நலமாக வாழ்ந்த மனிதர்!

1822ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாள்… வில்லியம் ப்யூமண்ட் என்ற இயவயதுக் கனடா இராணுவ டாக்டருக்கு அவசரத் தொலைபேசி அழைப்பு.

18 வயதான அலெக்ஸிஸ் செயின்ட் மார்ட்டின் என்ற விலங்குகளின் தோல்களை விற்கும் வியாபாரி ஒருவர் மீது எதிர்பாராத விதமாகக் குண்டு பாய்ந்துவிட்டது என்ற தொலைபேசித் தகவலைத் தொடர்ந்து டாக்டர் ஓடினார்.

மக்கள் அதிகமுள்ள கடைவீதியில் சுடப்பட்ட இந்த வியாபாரி பிழைத்திருக்கவே முடியாது. காரணம்இ இடப்பக்கம் இடுப்பு எலும்புக்கு மேல் பெரிய அளவு ஓட்டை ஏற்பட்டு அந்த இடமே வெந்து கருகிக் காணப்பட்டது. டாக்டர் அந்த இடத்திலேயே இரத்தத்தைக் கொடுத்துஇ 36 மணி நேரத்திற்குள் வியாபாரி இறக்க நேரிடலாம் என்று கூறிவிட்டார்.

ஆனால் மார்ட்டின் பிழைத்து எழுந்தார்! ஓர் அங்குலம் அளவுக்கு இடுப்புக்குக் கீழ் அகலமான ஓட்டை ஆழத்தில் வயிற்றுத் தசையின் கடைப் பகுதியும் தெரிந்தது. 76 வயதுவரை இந்த ஓட்டையுடன் நலமாக வாழ்ந்தார். மிருகங்களை கண்ணி வைத்துப் பிடித்து தோல் வியாபாரமும் செய்தார்.

வயிற்றில் உள்ள ஓட்டையுடன் எப்படி நலமாக வாழ்ந்தார்? காய்ச்சல் என்று இவர் படுத்ததே இல்லை. மேலும் இவர் சாப்பிட்ட உணவும் எப்படி சரியாக ஜீரணமானது? முக்கியமாக பெரிய ஓட்டையுடன் காணப்பட்ட இவர் அடுத்த 58 ஆண்டுகள் வாழ்ந்தது எப்படி? அதிசயம்தான்!

செவ்வாய், 24 மார்ச், 2009

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு

கொழுப்பு என்றாலே உடலுக்குத் தீமையைத் தருவது என்றொரு எண்ணம் இருக்கிறது. ஆனால் ஒமேகா-3 என்றொரு கொழுப்புவகை பலவகையான நோய்களில் இருந்து நம்முடைய உடலைப் பாதுகாக்கிறது என்கிற உண்மையை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

omega_3 நாம் உட்கொள்ளும் உணவுவகைகளில் இரண்டு வகையான கொழுப்புகள் இருக்கின்றன. ஒமேகா-3 கொழுப்பு, ஒமேகா-6 கொழுப்பு என்பவைகள்தான் அவை. நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் தாவர எண்ணெய்களிலும், மாமிச வகைகளிலும் ஒமேகா-6 வகைக்கொழுப்பு இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களில், முக்கியமாக மீன்களில் காணப்படுவது ஒமேகா-3 வகைக்கொழுப்பாகும். ஒரு சில தாவரங்களிலும் இந்த ஒமேகா-3 வகைக்கொழுப்பு காணப்படுகிறது. எந்த வகையான கொழுப்பு நம்முடைய உடலில் உள்ளது என்பதைப் பொருத்து உடல் நலம் அமைகிறது.

ஒமேகா-6 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:

இரத்தத்தின் ஒட்டும்தன்மை அதிகமாகிறது.
இரத்தக்குழாய்கள் கடினமாகி அவற்றின் மீள்தன்மை குறைகிறது.
இரத்த அணுக்களின் செல்சுவர்கள் கெட்டியாகி, நெகிழ்வுத்தன்மை குறைகிறது.
இந்தக் காரணங்கள், மூளை மற்றும் இதயப்பகுதியில் உள்ள இரத்தக்குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்த வழி செய்கின்றன.

ஒமேகா-3 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:

இரத்தத்தின் ஒட்டும் தன்மை குறைந்து, மீள்தன்மை அதிகரித்து, இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களின் செல்சுவர்களில் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பதால் இரத்தக்குழாய்களில் சிறிய அடைப்பு இருந்தால்கூட சிவப்பு அணுக்களின் நெகிழும்தன்மையினால் இரத்தஓட்டம் உறுப்புகளைச் சென்றடைகிறது.

மனிதன் தோன்றிய காலத்தில் அவனது முக்கிய உணவாக கடல் உணவுகளே இருந்தன. தாவர எண்ணெய்கள் அனைத்தும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையே. ஒர் ஆராய்ச்சி முடிவின்படி அமெரிக்க ஆண்களுக்கு இதய நோய்கள் மிக அதிகமாகவும், கிரீன்லாந்து எஸ்கிமோக்களுக்கு மிகக்குறைவாகவும் வருவதாக கண்டறியப்பட்டது. இரத்தத்தில் ஒமேகா-6 ன் அளவு அமெரிக்கர்களுக்கு 80%, பிரெஞ்சுக்கார்களுக்கு 65%, ஜப்பானியர்களுக்கு 50%, எஸ்கிமோக்களுக்கு 22% என்று புள்ளிவிவரம் கூறுகிறது. மேலும் ஒமேகா-3 க்கு புற்றுநோய், பக்கவாதம் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மீன் குறைவாக உண்ணும் விவசாயியைக் காட்டிலும், மீன் அதிகமாக சாப்பிடும் மீனவருக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு 30% குறைவு என்பது சரியான ஆதாரம் இல்லையா?

தகவல்: மு.குருமூர்த்தி

நவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்

Rtn.Dr.S.முரளி, M.D.S
ஆரோக்கியத்திற்கும், வசீகரமாகத் தோன்றுவதற்கும், ருசியாக சாப்பிடுவதற்கும், நன்றாகப் பேசுவதற்கும் பற்கள் இன்றியமையாதவை. பற்களின்ஆரோக்யம் உடலின் ஆரோக்யம். நமது முகத்தைக் கண்ணாடி பிரதிபலிப்பது போல் உடலில் தோன்றும் பல நோய்களின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை வாய் மற்றும் பற்களில் ஏற்படும் இராசயன மாறுதல்களைக் கொண்டே கண்டுபிடித்துவிடலாம். எனவே நமது உடலின் ஆரோக்யத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக நமது வாய் மற்றும் பற்கள் விளங்குகின்றன. மருத்துவ உலகில்
"Mouth is the Mirror of our Body" என்னும் வாசகம் மிகவும் பிரபலமானது. பல் போனால் சொல் போச்சு என்னும் தமிழ் பழமொழியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

பற்களின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள நவீன சிகிச்சை முறைகள்

1) பல் சொத்தையும், சிகிச்சை முறையும்:
பற்களில் சொத்தை ஏற்பட்டவுடன் அதை கவனித்து பற்களை அடைத்துக் கொள்ள வேண்டும். பற்களை அடைப்பதற்கு சிமெண்ட, வெள்ளி, தங்கம் மற்றும் பல்வேறு உலோகக் கலவைகளும், காம்போசிட் ரெசின் என்னும் பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்த பொருட்களும் இருக்கின்றன. பல்லின் தன்மைக்கேற்ப தகுந்த பொருளைக் கொண்டு பல் மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.

2) உடைந்த பற்களும், பற்கூழ் சிகிச்சை முறையும்:
பற்கள் உடைந்தாலோ, பற்களின் மீது அடிப்பட்டாலோ, சில சமயங்களில் அப்பற்கள் நிறம் மாறிக் கொண்டே வரும். பார்ப்பதற்கு விகாரமாகவும், பற்களின் வேர்களைச் சுற்றிக் கிருமிகளும் பரவும். இதனால் உடலின் முக்கிய பாகங்கள் பாதிக்கப்படலாம்.

2.அ) பற்கூழ சிகிச்சை (ROOT CANAL TREATMENT)
இதற்கு பற்களின் உட்பக்கமாக வெளியே தெரியாமல் ஒரு துவாரம் போட்டு பழுதுபட்ட பற்கூழை (Pulp) எடுத்துவிட்டு அந்தப் பகுதியை அடைத்து விடுவோம். அதன் பின் பற்களின் மேல் பரப்பில் உள்ள எனாமல் பகுதியை தேய்த்து எடுத்துவிட்டு மற்ற பற்களின் நிறத்திலேயே பீங்கான மற்றும் பிளாஸ்டிக்கினால் ஒரு உறை செய்து நிரந்தரமாக இருக்கும்படி பொருத்தி விடலாம்.

2.ஆ) பற்கள் சிறிதளவே உடைந்திருந்தால் அதில் காம்போசிட் என்ற பொருளை வைத்து நீலநிற ஒளியைப் (Ultra Violet) பாய்ச்சி முழு பல்லாக கொண்டு வரமுடியும். இந்த நவீ£ன சிகிச்சைக்கு Light Cure Treatment என்று பெயர்.

2.இ) பற்கள் பெரும் பகுதி உடைந்திருந்தாலோ, பல்லை எடுக்கும் நிலை ஏற்பட்டாலோ, பல் எடுத்த இடத்திலேயே எலும்பில் ஒரு துளையிட்டு அந்த எலும்புக்குள் Titanium என்ற உலோகக் கலவையினால் ஆன ஒரு அங்குல (1 or 11/2 inch) நீளமுள்ள ஸ்க்ரூவைப் பொருத்தி விடுவார்கள். பின்னர் அதன் மேல் பீங்கானில் பல்லைப் போல ஒரு உறை செய்து நிரந்தரமாகப் பொருத்தி விடலாம். இதற்கு Implant பற்கள் (Teeth) என்று பெயர்.

3) பல் ஈறு நோய் மற்றும் சிகிச்சை முறை:
பற்களுக்கு இடையில் படியும் காரைகளினால் பற்களின் ஈறுகள் கெட்டு இரத்தம், சீழ் கசியும், வாய் துர்நாற்றம் ஏற்பட காரைகளும் ஒரு காரணம். மேலும், வெற்றிலை பாக்கு போடுவதாலும், புகை பிடிப்பதாலும் பொடி போடுவதாலும், பற்களில் கறை படியும். இதற்கு பற்களை சுத்தம் செய்ய வேண்டும். தற்போது Ultrasonic Scaler எனப்படும் எலக்ட்ரானிக் கருவியைப் பயன்படுத்தி எனாமல் பகுதியைப் பாதிக்காமல் பற்களில் படிந்துள்ள காரை மற்றும் கறைகளை நீக்கிவிடலாம்.

4) தாடை எலும்பு முறிவும், சிகிச்சையும்:
வாகனங்கள் மூலமாக விபத்து ஏற்படும் போது தாடை எலும்புகள் உடைந்து விடுவதும் உண்டு. உடைந்த தாடை எலும்பில் பற்கள் இருக்கும் போது மேல் பற்களையும், கீழ் பற்களையும் சரியான நிலையில் வைத்து கம்பிகள் மூலம் கட்டி உடைந்த எலும்புகளை சரியான நிலையில் பொருத்திவிடலாம்.

இப்போதுள்ள நவீன சிகிச்சை முறையில் உடைந்த தாடை எலும்புகளில் எவர்சில்வர் தகடுகளைப் பொருத்தி அவைகளை நிரந்தரமாக வைத்து விடுவார்கள். இந்த நவீன சிகிச்சை செய்வதால் உடனேயே வாயை திறந்து பேசவும், சாப்பிடவும் வசதியாக இருக்கும்.

3) வாய் புற்று நோய் மற்றும் சிகிச்சை முறை
வாய் புற்று நோய்க்கு 3 காரணங்கள் உள்ளன. அவையாவன.

  1. SharpTeeth (கூர்மையான பற்கள்),

  2. Sepsis (வாயில் சீழ் வடிதல்),

  3. Spiced Food (கார வகை உணவுகள்),

  4. Syphilis (பல்வினை நோய்),

  5. Smoking (புகை பிடித்தல்).

மேற்கூறிய காரணங்களால் வாய்புற்றுநோய் வருவதால் ஒழுங்கான பழக்க வழக்கங்களை கடைபிடித்து, வெற்றிலை பாக்கு, புகையிலை தவிர்த்து, துலக்குவதற்கு மிருதுவான பொருட்களை உபயோகிப்பதாலும், அதிக காரவகை உணவுகளை தவிர்ப்பதாலும் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.

ஏதாவது ஒரு காரணத்தால் வாயில் புண் ஏற்பட்டால் அந்தப் புண் பத்து நாட்களுக்கு மேல் ஆறாமல் இருந்தால் கண்டிப்பாக பல் மருத்துவரை அணுகி அது புற்று நோயின் அறிகுறியா? என்று சோதித்து தேவையான சிகிச்சை மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டால் அறுவை சிகிச்சை மூலமாகவோ, கதிர்வீச்சு மூலமாகவோ, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமாகவோ ஆரம்ப நிலையிலேயே புற்று நோயைக் குணப்படுத்தி விடலாம்.

6) ஒழுங்கற்ற பற்களும், பல்சீரமைப்பு சிகிச்சையும்:
குழந்தைப் பருவத்தில் கை சூப்பும் பழக்கத்தினாலும், நாக்கைத் துருத்திக் கொள்வதாலும், கீழுதட்டைக் கடிப்பதாலும், உறங்கும் போது வாயினால் மூச்சுவிடுவதாலும், பற்கள் தூக்கலாகவும், ஏறுமாறாகவும் அமைந்து விடுகின்றன. பற்களின் அமைப்பு ஒழுங்காக, வரிசையாக இல்லாமல் சீர்கெட்டு இருந்தால் முகத்தின் வசீகரம் குறையும்.

இதற்கு ஆர்த்தோடான்டிக் அப்ளையன்ஸ் எனப்படும் கிளிப் போட்டு சரி செய்யலாம். இந்த சிகிச்சை முறையில் நிறைய வகைகள் உண்டு.

இது வரை குறிப்பிட்டுள்ளவை சில நவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகளாகும். நமது பற்களைப் பாதுகாத்துக் கொள்வதும், வாயை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நமது முக்கியக் கடமையாகும். வாய் சுத்தமாக இல்லாவிட்டாலும், பற்கள் பழுதாகி இருந்தாலும் நமது உடலில் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு நமது உடல் ஆரோக்யம் கெடலாம். ஆதலால் ஒருவர் தன் உடல் நலத்தைக் காக்க விரும்பினால் வாய் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளல் அவசியம்.

திங்கள், 23 மார்ச், 2009

நீரழிவு நோய் (டயாபிடிக்ஸ் என்றால் என்ன?)

காரின் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் இருந்தாலும், அதை இஞ்சினுக்கு செலுத்த பூயல் பம்ப் (Fuel pump) தேவைப் படுகிறது. நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreass) என்னும் சுரப்பி உள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்ல. இதனால் இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு அதிகமாகிறது.

இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரை இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப் பிடிக்காமல் இருந்தால் மோசமன விளைவுகளுக்கு ஆளாகிவிடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

சரியான முறையில் கவனம் செலுத்தினால் நீரழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம். அதிகப்படியான கவனத்துடன் "சுய கட்டுப்பாடுடன்" வாழவேண்டும். சுய கட்டுப்பாடு என்பது சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல், இரத்தப் பரிசோதனைகளை சரியான கால கட்டங்களில் செய்தல். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துக்களை உட்கொள்வது.

நீரழிவு நோய் மூன்று வகைப்படும்

  • டைப் 1 டயாபிடிஸ் (Type 1 diabetes)

  • டைப் 2 டாயாபிடிஸ் (Type 2 diabetes)

  • ஜெஸ்டேஷனல் டயாபிடிக்ஸ் (Gesgational diabetes)

    டைப் I நீரழிவு நோய்

    இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் (Juvenial) அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ் (இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச் சார்ந்தவர்கள். எதிர்ப்பு சக்தி வலு இழுக்கும் போது, இத்தொற்றுக் கிருமிகள் கணையத்தின் (pancreas) இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெற்ற கொழுப்பு மற்றும் சக்கரையை இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனை பயன் படுத்த முடியாமல் போகிறது. இவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாது. இது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும் போது இது திடீர் என்று வருகிறது. இதை சரி செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவத்தின் முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.

    டைப் I நீரழிவு நோய்யின் குணாதிசியங்கள்

    • பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது

    • அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

    • இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல

    • இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    • சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.

    • உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம் இருப்பின் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.

    டைப் II நீரழிவு நோய்

    இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும். பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். தற்சமய ஆய்வின் படி, இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும், உடல் உழைப்பைச் சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.

    இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (progressive) ஒரு நோயாகும். குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய், மற்றும் கண் தெடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம். இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக் குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும், மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல் சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.

    டைப் II நீரழிவு நோயின் குணாதிசியங்கள்

    • பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள்

    • அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்

    • பொதுவாக இது பரம்பரை நோய்

    • பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பார்கள்.

    இரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

    ஜெஸ்டேஷனல் நீரழிவு நோய்

    கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் II நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    உணவு: உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும். மாவுச்சத்து நாம் உண்ணும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் கிடைக்கிறது. கோதுமையில் நார்பொருள் (fibre content) இருப்பதால், சக்கரை இரத்தத்தில் ஒரே சீராக சேருகிறது. காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. பூமிக்கு கீழே விளைவதை தவிர்க்கவேண்டும் (உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட்). பழங்களில் சப்போட்டா, பழாப்பழம், சீத்தா போன்றவற்றை தவிர்க வேண்டும்.

    உடற்பயிற்சி: உடற்பயிற்சி என்பது தினம் 30-45 நிமிட சுறுசுறுப்பாக நடப்பது. முடிந்தவர்களுக்கு 30 நிமிட ஓட்டம் (சீரான ஓட்டம்). இருதய நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    சிகிச்சை: இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும். சரியான மருத்துவரிடம் முறயான சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவரின் அலோசனைப்படி இரத்த பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை செய்ய வேண்டும். உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். கண் மருத்துவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். இவற்றை கடைப்பிடித்தால் ஆரோக்கிமான வாழ்வு உண்டு.

  • ஞாயிறு, 22 மார்ச், 2009

    வலிப்பு நோய்

    வலிப்பு நோய் என்றால் என்ன?
    மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும் போது ஏற்படும் விளைவே வலிப்பு நோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்றும் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.

    வலிப்பு நோய் யாரை பாதிக்கும்?
    யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். மொத்த மக்கள் தொகையில் 100க்கு 3 முதல் 5 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    இந்த நோய் அறிகுறிகள் யாவை?
    இது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது.

    • கை, கால் இழுத்தல்

    • வாயில் நுரை தள்ளுதல்

    • சுய நினைவு மாறுதல்

    • உடலில் உள்ள பாகம் துடித்தல் (வெட்டுதல்)

    • கண் மேலே சொருகுதல்

    • சில சமயம் சுய நினைவின்றி சிறுநீர் கழித்தல்

    • திடிரென மயாக்கமடைந்து விழுதல்

    • கண் சிமிட்டல்

    • நினைவின்றி சப்பு கொட்டுதல் (வாய் அசைத்தல்)

    • மற்றும் சில நிமிடங்கள் தன் சுய நினைவின்றி பேசுதல் போன்றவை வலிப்பு நோய்ன் அறிகுறிகள்.

    வலிப்பு நோய் எதனால் வருகிறது?

    • மூளையில் பூச்சிக்கட்டி (Neurocysticercosis)

    • மூளையில் காச நோய் (Tuberculoma)

    • தலைக் காயம் (Head Injury)

    • குழந்தைகளுக்கு சுரம் ஏற்படும் போது (Febrile Convulsions)

    • மூளை காய்ச்சல் (Brain Fever)

    • மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கும் போது

    • மூளையில் புற்று நோய் (Brain Tumer)

    • உறக்கமின்னை

    • போதைப் பொருள் உபயோகித்தல்

    மற்றும் சிலருக்கு எக்காரணமும் இன்றி வரலாம்

    இது பரம்பரை வியாதியா?
    பெரும்பாலும் 100க்கு 90 பேருக்கு இது பரம்பரை வியாதி இல்லை. மிக குறைந்த பேருக்கே இது பரம்பரையின் பாதிப்பாகும்.

    இந்த நோய் எந்த வயதில் வரும்?
    இந்த நோய்க்கு வயது வரம்பு கிடையது. குழந்தை முதல் முதியோர் வரை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.

    இந்த நோய் உள்ளவர்களுக்கு செய்யப்படும் சோதனைகள் யாவை?
    முதலில் மருத்துவர் நோய்க்கான அறிகுறிகளை கேட்டறிந்து அதன்பின் வலிப்பு நோயினை வகைப்படுத்துகிறார். பின்னர் வியாதிக்கு ஏற்ப,

    • EEG: மூளையின் மின் அதிர்வைப் வரைபடமாக்குதல்.

    • CT Scan: மூளையின் பாகங்களை கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்தல்.

    • MRI Scan: தேவைப்படின் காந்த அதிர்வு மூலம் மிகத்துல்லியமாக மூலையின் பாகங்களை படம் எடுத்தல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

    இந்த நோய் உள்ளவர்கள் எனன செய்ய வேண்டும்?
    அருகாமையில் உள்ள மூளை நரம்பியல் மருத்துவ நிபுணரை சந்தித்து நோயின் வகை, நோய்க்கான காரணம் ஆகியவற்றை பரிசோதனைகள் மூலம் அறிந்து மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்ந்து மருந்து உட்கொள்ள வேண்டும்.

    எவ்வளவு காலம் மருந்து உட்கொள்ள வேண்டும்?
    இது வியாதியின் வகை மற்றும் காரணத்தை பொருத்து மறுபடுகிறது பெரும்பாலும் 3 முதல் 5 வருடம் வரை உட்கொள்ள வேண்டி இருக்கும். பின்னர் தேவையான பா¢சோதனைகளுக்கு பிறகு மருந்துகளை மெல்லக் குறைத்து அதன் பின் நிறுத்த வேண்டும்.

    இந்த நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
    தாராளமாக செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்து அவா¢ன் அலோசனைப்படி மருத்தினை தொடர்ந்து உட்கொள்ளவும்.

    இந்த நோய் உள்ளவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
    தாராளமாக, வலிப்பு நோய் தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கும். ஆனால் முறையான வலிப்பு நோய் மாத்திரையும் ·போலிக் ஆசிட் (Folic Acid) என்ற சத்து மாத்திரையும் சாப்பிடும் போது சுகப்பிரசவம் காணலாம். கருத்தா¢க்கும் முன் உங்கள் மருத்துவரை அவசியம் சந்திக்கவும்.

    இந்த நோய் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டலாமா?
    வலிப்பு இல்லாமல் குறைந்தது 6 மாதங்கள் ஆன பிறகு வாகனங்கள் ஓட்டலாம்.
    வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:

    • தவறாமல் மருந்து சாப்பிட்டால் வலிப்பு இல்லாமல் இருக்கலாம்.

    • பள்ளி, கல்லு¡¢ மற்றும் அலுவலகங்களுக்கு செல்லலாம்.

    • விளையாடலாம், உடற்பயிற்சி, தியானம் மற்றும் பயணம் செய்யலாம்.

    • திருமணம் செய்து கொள்ளலாம், உடலுறவு கொள்ளலாம், சாதாரணமாக குழந்தைகளைப் பெறலாம்

    • உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.

    • நல்ல உணவு, உடற்பயிற்சி, தியானம் மற்றும் சிந்தனை உங்களை நல்வழிப்படுத்தும்.

    • நீங்கள் மற்றவர்களைப் போல் நன்கு வாழலாம்.

    வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை:

    • உங்கள் மருத்துவரை கலந்து அலோசிக்காமல் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவோ அல்லது வேறு மருந்துக்கு மாறவோ கூடாது.

    • நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும்.

    • தேவையற்ற மன உளைச்சல் கூடாது.

    • மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் வலிப்பு வருவதை தூண்டலாம்.

    • நகரும், அசையும் உயிருக்கு ஆபத்தான இயந்திரங்கள் கொண்டு வேலை செய்யக் கூடாது.

    • அதிக நேரம் தொலைக்காட்சி (TV) பார்க்கக் கூடாது.

    முறையான சிகிச்சை செய்ய வில்லை என்றால்?
    ஒவ்வொரு முறை வலிப்பு வரும் போதும் மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்பு அடைகின்றன. இது நாளடைவில் மூளை வளர்ச்சியை பாதிக்கும், எனவே முறையான மருந்துகள் சாப்பிட்டு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

    சனி, 21 மார்ச், 2009

    ஒவ்வாமை(அலர்ஜி)

    பொதுவாகவே, பல நுற்றுக்கணக்கான பொருட்கள் ஒவ்வாப் பொருட்களாக இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதால், ஒவ்வாமை இயல்புடைய ஒருவருக்கும் குறிப்பாக, எந்தப் பொருள் ஒவ்வாமை அறிகுறிகளை அல்லது கேடுகளை அல்லது ஒவ்வாமை நோய்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல!

    இருந்தாலும், ஒவ்வாமையினால் தொல்லைக்குள்ளான ஒருவருடைய சுற்றுப்புறத்தில், என்னென்ன பொருட்களெல்லாம் இருக்கின்றன, அவற்றுள்அதிகமாக ஒவ்வாப் பொருளாக இருக்கக்கூடிய பொருட்கள் என்னென்ன என்பதை அறிந்துக்கொண்டால், ஒருவருக்கு ஒவ்வாமைக் கேடுகளை ஏற்படுத்தும் பொருளை அல்லது பொருட்களை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஒவ்வாமை தன்மையுடைய ஒருவருக்குப் பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களே ஒவ்வாப் பொருட்களாக இருக்கின்றன என்பதை நாம் இங்கு தெரிந்து கொள்ள வேண்டும்!

    நோய் நிர்ணயம் _ சிந்தித்தறிதல்

    ஒருவருக்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட என்னென்ன பொருட்கள் காரணங்களாக உள்ளன என்பதைக் கண்டறிய, முதலில் ஒவ்வாமை தன்மையுடையவர் கூறும் அறிகுறிகளை ஒன்றுவிடாமல் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அவருடைய குடும்பத்தைப் பற்றியும், அவர் செய்யும் தொழிலைப் பற்றியும் வாழும் இடத்தைப் பற்றியும் மறக்காமல் கேட்டறிய வேண்டும். பொதுவாக ஒவ்வாமை நோய்கள், ஒரு மரபுக் கோளாறு போலவே தெரிகின்றன. குடும்பத்தில் ஏற்கனவே வேறு யாருக்காவது ஆஸ்துமா, கரப்பான், தும்மல், அரிப்பு போன்ற ஒவ்வாமை நோய்கள் உள்ளவர்களே, ஒவ்வாமையினால் அதிகமாகப்பாதிக்கப்படுகின்றனர்.

    ஆனால் அதே நேரத்தில், ஒரு குடும்பத்தில் யாராவது இதுபோன்ற ஏதாவது ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டிருந்தால், அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறுயாராவது ஒவ்வாமையினால் கட்டாயம் தொல்லைக்குள்ளாவார்கள் என்றும் சொல்லமுடியாது. அதே போல ஒன்றுபோலுள்ள இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை, ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இன்னொரு குழந்தை எந்தவிதமான ஒவ்வாமை கேட்டையும் பெற்றிருக்காது என்பதை நாம் அறியவேண்டும்.

    உதாரணத்திற்கு, ஒருவருக்கு ஆஸ்துமாநோய் இருந்தால் அவருடைய ஒவ்வாமையியல்புடைய சந்ததிகளுக்கும் அதே ஆஸ்துமா நோய்தான் வரவேண்டும் என்பதில்லை. தும்மல்நோய், கரப்பான் எனப்படும் ஒவ்வாமைத் தோல் நோய் போன்ற வேறு ஒவ்வாமை நோய்களினாலும் அவர்கள் தொல்லைக்குள்ளாகலாம். இவைகளைப் பற்றியெல்லாம் இவ்வளவு விரிவாக, ஒவ்வாமையியல்புடையவரிடம் அறிந்து கொள்ள நாம் முயற்சிப்பதைப்போல, அவர் செய்யும் தொழிலுக்கும், ஒவ்வாமைக்கும் இருக்கின்ற மிக நெருங்கிய தொடர்பைப் பற்றியும் சிறிது விளக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது.

    நோய் நிர்ணயம் சோதித்தறிதல்

    இதுபோன்ற ஒவ்வாமை தொடர்பான விவரங்களையெல்லாம் கேட்டறிந்து கொண்ட பின்னர் ஒவ்வாமை இயல்புடையவரைத் தலை முதல் கால் வரை கூர்ந்து கவனித்து, ஒவ்வாமை தொடர்பான மற்ற அறிகுறிகளான சிவந்த நீர் வடியும் கண்கள், காது, நுனி மூக்கு மேல்கோடு மூக்குத்தண்டு வளைவு, எலும்புக் காற்றறை அழற்சி சொத்தைப் பல், தொண்டை நிணத்திசு அழற்சி மூக்கடித்தசை வளர்ச்சி தொற்றுக்கள், தோல்நோய்கள், மூச்சுவிடுவதில் கடினம் அல்லது மூச்சை வெளிவிடும்போது மெல்லிய சத்தம் போன்ற கோளாறுகள் ஏதேனும் தெரிகிறதா என்று எங்களைப் போன்ற ஒவ்வாமை, ஆஸ்துமா, அக்குபங்சர் மருத்துவர் பரிசோதிக்க வேண்டும்.

    நோய் நிர்ணயம் _ ஆய்ந்தறிதல்

    சாதாரணமாக, மூக்கு உட்புறச் சவ்விலுள்ள ஒவ்வாமை நோய்களுக்கே உரித்தான, அதிலும் குறிப்பாக தும்மல் நோய் கண்டவர்களுக்குச் செய்யப்படும் மூக்குச் சளி ஈசினோபில்களின் எண்ணிக்கை மூலமும், ஒரு சிறிய இரத்தப் பரிசோதனை மூலமும் (CBC, AEC) நோயாளி ஒவ்வாமை யினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இரத்தத்தில் பொதுவாக, பலவகையான இரத்த வெள்ளை அணுக்கள் இருக்கும். இவற்றுள் ஒருவகை இரத்தச் செவ்வரி வெள்ளையணுக்கள் (Eosinophils), இரத்தப் பரிசோதனைக் கூடங்களில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் இயோசின் (Eosin) எனப்படும் ஒரு வகை நிறமூட்டியை எளிதாக உறிஞ்சி, சிவப்பு நிறமாக மாறிவிடும். ஒருவர் ஒவ்வாமையினால் கேடுற்றிருக்கும்போது அவருடைய இரத்தத்தில் இந்த வகை வெள்ளையணுக்கள் இயல்பை விட அதிக அளவில் அதிகமாகிவிடும். இதைத்தான் பொதுவாக ஈசினோபீலியா என்று அழைக்கிறோம்.

    ஆனால் அதேசமயம், அதே நோயாளி வேறு சில ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவருடைய இரத்தத்தில் ஈசினோபில்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் என்பதை நாம் அறியவேண்டும். இந்த ஒட்டுண்ணிகளில் ஒருவகையான தட்டைப் புழுவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சில சமயங்களில் ஒவ்வாமை உண்டாகி, ஆஸ்துமா இழுப்பும் வந்துவிடும்.

    இவைதவிர, இரத்தத்தில் ஒவ்வாமை தொடர்பான மற்ற பரிசோதனைகளான ராஸ்ட் (RAST Radio Allergo Sorbent test) எனப்படும் முக்கியமான மிரீணி என்ற எதிர்ப்பொருட்களின் எண்ணிக்கை, நோயெதிர்ப்புச் செறிவுச் சோதனை ஊநீர் புரதச் சோதனை, இரத்தத்தில் திசு நீர்த் தேக்கி வினை குறைப்பணுக்கள் உயிரணு நச்சுப் பரிசோதனை மற்றும் சிறுநீர், மலம் போன்ற பரிசோதனைகளையும் ஒவ்வாமை இயல்புடையவருக்குச் செய்ய வேண்டும்.

    எலும்புக் காற்றறை, மார்பு ஊடுகதிர்ப்படங்கள், தோல் ஒவ்வாமை இருப்பவர்களுக்குத் தேவைப்பட்டால் தோல்திசு ஆய்வு (Skin biopsy) போன்றனவும் சில நேரங்களில் செய்ய வேண்டியிருக்கும் என்பதை நாம் இங்கு தெரிந்து கொள்ளவேண்டும்.

    சில நேரங்களில் ஒவ்வாமை இயல்புடையவர், சுவாசம் தொடர்பான நோய்கள் கண்டிருந்தால், குறிப்பாக அவர்களுக்கு சுவாச இயக்கப் பரிசோதனைகளுடன் (pulmonary Function Test PFT) தோலில் செய்யக்கூடிய முக்கியமான ஒவ்வாமைத் தோல் பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    அலர்ஜி டெஸ்ட் எனப்படும் ஒவ்வாமைத் தோல் பரிசோதனை என்றால் என்ன?

    பொதுவாக தும்மல் நோய், விஷக்கடி போன்ற பல்வேறு ஒவ்வாமை நோய்களைக் கொண்ட ஒவ்வாமை தன்மையுடையோருக்கும், அதிலும் குறிப்பாக ஒவ்வாமையினால் ஆஸ்துமா இழுப்பு வரக் கூடியவர்களுக்கும், அவர்களுக்கான ஒவ்வாப் பொருட்களைக் கண்டறிய, தோலின் மேலோட்டமாகச் செய்யப்படும் பரிசோதனையே ஒவ்வாமைத் தோல் பரிசோதனை என்பதாகும். இதுதான் அனைவராலும் அலர்ஜி டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

    என்னென்ன பொருட்களுக்குச் செய்ய வேண்டும்?

    இந்த முக்கியமான பரிசோதனையைச் செய்வதற்காக, நாம் சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளக் கூடிய பல வகையான சந்தேகிக்கப்படும் ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய பொருட்களின் கிருமி நீக்கம் செய்யப்பட்ட, சுத்தமான கரைசல்களை (Diagnostic Allergens) ஒவ்வாமை நிபுணர்கள் தயாராக வைத்திருப்பார்கள். இவற்றுள் முக்கியமானவை பல்வேறு தாவரங்களின் மகரந்தங்கள், காளான்கள், தூசிகள், மர வகைகள், பார்த்தீனியம் போன்ற தாவரங்கள், இலைகள், பூச்சிகள், செல்லப் பிராணிகளின் எச்சங்கள், ரோமங்கள், சிறகுகள் மற்றும் சைவ, அசைவ உணவுப் பொருட்கள், பழ வகைகள் போன்றவையாகும். இதிலும் மிக முக்கியமானது, வீட்டுத்தூசி உண்ணி (House Dust Mite) அல்லது பூச்சியின் கழிவுப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறப்புக் கரைசல்தான்!

    எப்படிப் பரிசோதனைப் பொருட்களைப் பாதுகாக்கிறார்கள்?

    பல்வேறு ஒவ்வாமை நோய்களைக் கண்டறியப் பயன்படும் இந்த முக்கியமான தோல் பரிசோதனையைச் செய்ய, இது போன்ற சுமார் 250 வகையான ஒவ்வாப் பொருட்களின் கரைசல்களைத் தனித்தனியாக, அவற்றின் வீரியம் குறையாவண்ணம் கெடாமல் குளிர்சாதனப் பெட்டியில் குளிர்சங்கிலிப் பாதுகாப்பு முறையில் (2/8CCold Chain Maintenance) எங்களைப் போன்ற ஒவ்வாமை _ ஆஸ்துமா _ அக்குபங்சர் சிறப்பு மருத்துவர்கள், தங்களின் முதலுதவி வசதிகள் பெற்ற மருத்துவமனைகளில் எந்நேரமும், பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.

    எங்கு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளக்கூடாது?

    கண்ட மருத்துவக் கூடங்கள், இதில் அனுபவமும், பயிற்சியும், பதிவும் பெறாத மருத்துவர்கள், போதிய முதலுதவி வசதிகள் இல்லாத மருத்துவமனைகள் போன்றவற்றில் இந்த வகையான ஒவ்வாமை தோல் பரிசோதனைகளைச் செய்துகொள்வதைக்கட்டாயம் ஒவ்வாமைக் கண்டவர்கள் தவிர்க்க வேண்டும்.

    எத்தனை செய்ய வேண்டும்?

    ஒரு குறிப்பிட்ட ஒவ்வாமை நோயாளிக்கு, என்னென்ன ஒவ்வாப் பொருட்களினால் ஒவ்வாமைக் கேடுகள் அல்லது நோய் அறிகுறிகள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளன என்பது பற்றி, ஒவ்வாமை மருத்துவரும், நோயாளியும் நன்கு கலந்துரையாடி, பல வகையான ஒவ்வாப் பொருட்களில், ஒருவருக்குக் காரணமாகக் கருதக்கூடிய, ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு எண்ணிக்கையுள்ள சுமார் 50_70 வரையிலான அன்றாடம் எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான ஒவ்வாப் பொருட்களை மட்டுமாவது சோதனைக்குத் தேர்வு செய்து கொள்ளவேண்டும்.

    உடலின் எந்தப் பகுதியில் செய்ய வேண்டும்?

    பொதுவாக, இப்பரிசோதனைகளை ஒவ்வாமையுள்ள பெண் நோயாளிகளுக்கு முழங்கைகளுக்குக் கீழ் இரு முன்கைகளின் கீழ்புறத்திலும், ஆண் மற்றும் சிறுவர்களுக்கு மேல்புற முதுகிலும், கைகளிலும் 10_15 நிமிடங்களுக்குள் பரிசோதித்துவிடலாம்.

    எப்படி செய்ய வேண்டும்?

    ஒவ்வாப் பொருட்களின் கரைசலின் ஒரே ஒரு துளியை, ஒவ்வொன்றாக எடுத்துத் தோலின் மேல்விட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்ட கூர்மையான சிறிய குச்சி (Sterilised Tooth Prick) கொண்டு தேய்த்துப் பரிசோதிக்கும் சோதனை (Scratch Allergens Test) மூலமும், ஒவ்வாப் பொருட்களின் கரைசல்கள் கொண்ட தோல் ஒட்டும் துணி மூலமும் (Patch test). ஒவ்வொன்றாகக் கிருமி நீக்கம் செய்யப்பட்ட சின்னஞ்சிறிய ஊசிகளைக் கொண்டு மிகவும் லேசாகக் குத்திப் பரிசோதிக்கும் சோதனை (prick test) மூலமும். ஒரே சமயத்தில் பல ஊசிமுனைகளைக் கொண்டு (Multi Test Applicator) தோலின் மேலோட்டமாகக் குத்தி அல்லது ஊடுருவிப் (Prick or puncture) பரிசோதிக்கும் சோதனைகள் மூலமும் ஒவ்வாமை உண்டாக்கும் பொருட்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    சந்தேதிக்கும் ஒவ்வொரு ஒவ்வாப் பொருட்களின் கரைசலில் ஒரே ஒரு துளியை (1 cc), சின்னஞ்சிறிய ஒரு முறை பயன்படுத்தும் (Disposable) 1 மி.லி. இன்சுலின் ஊசி கொண்டு குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் சாதாரண மாகக் காசநோய்த் தாக்கம் அறியச் செய்யும் மேன்டு (Mantoux text) பரிசோதனை போல் தோலினூடே செலுத்திப் பரிசோதிக்கும் தோல் ஒவ்வாமைப் பரிசோதனை (Endermal or Intradermal Allergen Test)) கொண்டும் ஒவ்வாப் பொருட்கள் எவை எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

    இவை போன்ற ஐந்து விதமான ஒவ்வாமைத் தோல் பரிசோதனைகளில், மிக முக்கியமானது மூன்றாவதாகக் குறிப்பிட்ட, மிகவும் லேசாகக் குத்திப்பரிசோதிக்கும் சோதனை (prick test)) தான் மிக முக்கியம். மற்ற நான்கு வகையான தோல் பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்க முடியாத ஒவ்வாப் பொருட்களை, இச்சோதனை மூலம் எளிதில் கண்டறிந்து உறுதி செய்துவிடலாம்.

    தூண்டும் பரிசோதனையா? அப்படி என்றால் என்ன?

    சில வகை ஒவ்வாமை நோயாளிகளுக்கு இத்தோல் பரிசோதனைகளுடன், ஒவ்வாமை உண்டாக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக நேரடியாக நுண்துகள்களாக (Spray) கண், காது, மூக்கு மற்றும் மூச்சுக் குழாய்களுக்குள் கவனமுடன் செலுத்திப் பார்த்து (Provocative Test), அவர்களுக்கான ஒவ்வாப் பொருட்கள் எவை எவை என்றும் ஒப்பிட்டுக் கண்டறிந்து உறுதி செய்யலாம். இப்பரிசோதனைக்குக் கிளறும் அல்லது ஒவ்வாமையைத் தூண்டும் பரிசோதனை என்று பெயர். தீவிர சிகிச்சைப் பிரிவு கொண்ட பெரிய மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக் கூடங்களில் மட்டுமே இச்சோதனையைக் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.

    தோல் பரிசோதனைக்குப் பின் கவனம்:

    இவ்வாறு தோல் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், 15_30 நிமிடங்களுக்குள், ஒவ்வாப் பொருட்கள் தோலின் மேல் அல்லது தோலின் ஊடே செலுத்தப்பட்ட இடங்கள் சிவந்தும், தடித்தும் (Erythema. Wheal) விடுவதைக் காணலாம். இவ்விடங்களை, இதற்கென்றே சிறப்பு அளவு கோலின் (Skin Test Reaction Gauge) முறைப்படி அளந்து, எவையெவை அந்தக் குறிப்பிட்ட மேற்கொண்ட 6, 24, 72 மணி நேரங்களில், பரிசோதிக்கப்பட்டஇடங்களில் வீக்கம், நமைச்சல் மற்றும் வலி ஏதேனும் இருக்கிறதா என்பதை ஒவ்வாமை நோயாளிகளோ, அவர் நலம் விரும்பிகளோ கண்டறிந்து ஒவ்வாமை மருத்துவரிடம் தெரிவிக்கலாம். தோல் பரிசோதனை செய்யப்பட்ட தடித்த, சிவந்த இடங்கள் சில மணி நேரங்களிலேயே மறைந்து விடுவதால், இச்சோதனையால் மட்டும் அன்றாடப் பணிகளுக்கு எந்தவிதமான இடையூறும் நேராது என்பதைத் தெளிவாக ஒவ்வொரு ஒவ்வாமை நோயாளியும் அறிய வேண்டும்.

    தோல் பரிசோதனைக்கு முன் கவனம்

    ஆனால், தோல் பரிசோதனைகளை மேற் கொள்வதற்கு 2_3 நாட்களுக்கு, ஒவ்வாமையைக் கட்டுப் படுத்தக் கொடுக்கப்படும் மாத்திரைகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும். ஒவ்வாமையுடையோர் அப்போதைக்கு அத்தொந்தரவுகள் அதிகம் இல்லாமலும், குறிப்பாக ஆஸ்துமா இழுப்பு இல்லாமலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இதற்காக ஒவ்வாமை மருத்துவர் மேற்பார்வையில் மேல் பூச்சு மருந்துகள் ஆஸ்துமா உள்ளிழுப்பான்கள், மூச்சுக் குழல் விரிவாக்க மாத்திரைகள் (Bronchodilators) போன்றவற்றை எப்போதும் போல் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

    தோல் பரிசோதனை செய்யும்போது கவனிக்க வேண்டியவை

    ஸ்டீராய்டு மாத்திரைகள் தினந்தோறும் பயன்படுத்தியே ஆக வேண்டிய ஸ்டீராய்டு மாத்திரைகள் சார்ந்த ஆஸ்துமா நோயாளிகளுக்கு (Steroid Dependent Asthmatcatucs) , இவ்வகையான ஒவ்வாமை தோல் பரிசோதனைகளை மிகவும் கவனமுடனும், தேவைப் பட்டால் மட்டுமே மேற்கொள்வது நல்லது. இதே போல், இப்பரிசோதனைகளை உட்கார்ந்தும், நின்று கொண்டும் செய்து கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். அரிதாக சில நேரங்களில் சில ஒவ்வாமை நோயாளிகளுக்கு பயத்தாலும், ஒவ்வாப் பொருட்களின் கரைசல்களாலும், வழக்கத்தைவிட அதிக வியர்வை, நெஞ்சு படபடப்பு, மயக்கம் மற்றும் சில நேரங்களில் அதிர்ச்சியும் (Anaphylaxis) ஏற்படலாம். எனவேதான் இவற்றையெல்லாம் காலதாமதமின்றி நேரத்துடன் அவசர சிகிச்சை முறைகளை மேற்கொள்ள, ஒவ்வாமை மருத்துவர் முன்னேற்பாடாக, தமது மருத்துவமனைகளில் போதிய வசதிகளைச் செய்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். Dysprotenemia எனப்படும் ஒரு வகைப் புரதமின்மை, சில ஒவ்வாமை நோயாளிகளுக்கு மட்டுமே அரிதாக ஏற்படுவதாகத் தெரிகிறது.

    தோல் பரிசோதனை முடிவுகள்

    எப்போதாவது, சில சமயங்களில் வெகுசில ஒவ்வாமை நோயாளிகளுக்கு மட்டும் தோல் ஒவ்வாமைப் பரிசோதனைகளின் போது, ஒவ்வாமையாக இருக்கும் என்று சந்தேகப்படும் ஒவ்வாப் பொருள், அதிகத் தடிப்பு, வீக்கம் போன்றவற்றை உண்டாக்காமலும் (False Negative Reaction), தமக்கு இப்பொருள் ஒவ்வாமையற்றது என்று உறுதியாக எண்ணிக் கொண்டிருப்பது அதிகத் தடிப்பு, வீக்கத்தை (False Positive) உண்டாக்கியும் விடும் என்பதை இங்கு நாம் மிகுந்த கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக, உணவுப் பொருட்களின் ஒவ்வாமையைப் பரிசோதித்து முடிவு தெரிந்து கொள்ளும் போது, ஒவ்வாமையுடையவர் ஏற்கனவே அந்த உணவுப் பொருளை உண்ணும்போது, ஒவ்வாமைத் தொல்லைகள் அதிகமாகத் தெரிகின்றதா என்பதைப் பற்றி ஒவ்வாமை மருத்துவர், நோயாளி கலந்துரையாடுவது எப்போதும் நல்ல பயன்தரும் முயற்சியாகும். இதுபோல் நேரம் அதிகமானாலும் ஒவ்வொரு ஒவ்வாப் பொருளுக்கும் ஒவ்வாமை அறிகுறிகளுக்கும் உள்ள தொடர்பையும் அறிவது மிகவும் நல்லது.

    சிறிது உராய்ந்தாலும், கீறினாலும், லேசாக அடிபட்டாலும் தோலில் அந்தந்த இடங்களில் தானாக அதிகத் தடிப்பாகும் நிலையான தோல் வரைவியல் அல்லது கீறல் தழும்பு எனப்படும். ஒரு வகை தோல் பாதிப்பு கொண்ட ஒவ்வாமை நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது ஓர் ஒவ்வாமை மருத்துவருக்கு அதிகக் கவனமும், பொறுப்பும் தேவைப்படுகின்றன.

    காலம் முழுவதும் துன்பத்தைக் கொடுக்கவல்ல ஒவ்வாமைக் கேடுகளைப் பார்க்கும்போது, எப்போதாவது, யாருக்காவது ஏற்படும் இது போன்ற விரும்பத்தகாத விளைவுகளைப் பற்றி அதிகக் கவனமும், பயமும் கொள்ள வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது!

    ஒவ்வாமை கூருணர்ச்சிக் குறைப்பு ஊசிகள் அல்லது அலர்ஜி தடுப்பூசிகள்

    இவ்வாறு, பல்வேறு ஒவ்வாமைக்கேடுகள் உண்டாகக் காரணங்களான, ஒவ்வாமைப் பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்து பின்னர், தவிர்க்கக் கூடிய ஒவ்வாப் பொருட்களைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

    அப்படியும் தவிர்க்க அல்லது ஒதுக்க முடியாத, மிகவும் அவசியமான அந்தந்த ஒவ்வாமை நோய் அறிகுறிகளுக்குக் காரணமான, ஒவ்வாப் பொருட்களுக்கு மட்டும் ஒவ்வாமை கூருணர்ச்சிக் குறைப்பை உண்டாக்கும் சிகிச்சையை (Desensitisation or Hyposensitisation or Immunotherapy) மேற்கொள்வது நல்ல பயன் தரும் முயற்சியாகும்

    Thanks to : ஈகரை

    வெள்ளி, 20 மார்ச், 2009

    வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்


    வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்கே.எஸ்.சுப்ரமணி



    உப்புள்ள பண்டம் குப்பையிலே!

    உங்கள் உணவில் உப்பு அதிகம் சேருகிறதா? கருவாடு, உப்புக்கண்டம், உருளைக்கிழங்கு சிப்ஸ், உப்பு அல்லது மசாலா வேர்க்கடலை, முட்டை, இறைச்சி வகைகள், உப்பு அதிகம் சேரும் கார்ன்ஃப்ளாக்ஸ் என்ற சோளவறுவல் முதலியவற்றை விரும்பி உண்ணுகிறீர்களா?

    உடனடியாக உப்பு சேர்த்து சமைப்பதைத் தவிரித்துவிடுங்கள்.

    வடக்கு கான்பெராவில் உள்ள குன்னவால் என்ற இடத்தில் வசிக்கும் 37 வயதுக்காரர், ரிச்சர்ட் ஜோன்ஸ். 1998 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மூக்கில் இருந்து இரத்தம் ஒழுக திகைத்துப் போனார். நன்கு ஆரோக்கியமாக உள்ளவர். 1998 ஜுலையில் மீண்டும் இரத்தம் மூக்கிலிருந்து! ஆனால், இந்த முறை இரத்தம் நிற்கவில்லை. எனவே, மருத்துவமனையில் சேர்ந்தார்.

    அவரது இரத்த அழுத்த அளவு 120/80 என்பதற்குப் பதிலாக 170/100 என்றிருந்து. எனவே, மாத்திரைகளுக்குப் பதிலாக இவரது வாழ்க்கை முறை மாற்றப்பட்டது.

    மாலை நேரங்களில் டி.வி. முன்னால் அமர்ந்து கொண்டு பீர், சிப்ஸ், முட்டை, பன்றி இறைச்சி, சீஸ் முதலியவற்றை சாப்பிடுவதை அடியோடுவிட்டார். உப்பு இல்லாத உணவுத்திட்டத்திற்கு திரும்பினார். ஸ்டிரோக் அல்லது இறப்பிலிருந்து மீண்டு விட்டார்.

    எல்லோருக்கும் இரத்தக் கொதிப்பு இருந்தால், இப்படி வெளிப்படையாக மூக்கிலிருந்து இரத்தம் ஒழுகாது. உணவில் உப்பு அதிகம் சேரச் சேர இரத்தக் குழாய்கள் தடித்துப் போகின்றன. இதனால், இரத்தம் பாயும் அளவு குறைகிறது. இதைச் சரி செய்ய இதயம் அதிக அழுத்தத்துடன் செயல்பட வேண்டியிருக்கிறது. உப்பு அதிகம் சேர்வதால் இரத்தம் கெட்டியாகி, பாய்வதும் தாமதப்படுகிறது. இதனால் அதிக இரத்த அழுத்த நோய் ஏற்பட்டு மாரடைப்பு, ஸ்டிரோக், வயிற்றுப் புற்றுநோய் முதலியவையும் ஏற்படுகின்றன. அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதே உப்பின் தலையாய பணி.

    உப்பு நிறையச் சேர்த்துக் கொள்பவர்களின் உடலில் கூடுதலாக இரண்டு லிட்டர் தண்ணீர் (உடலில்) இருக்கிறது. இதன்மூலம் உடல் எடையில் இரண்டு கிலோ அதிகரிக்கிறது.

    இரத்த அழுத்தம், உடல் எடை, மதுப் பழக்கம், இவற்றிற்கு இடையே உள்ள உறவு எப்படி இருக்கிறது என்று 32 நாடுகளில், பத்தாயிரம் பேர்களின் உடல் நிலையை ஆராய்ந்தார்கள். உப்பு குறைவான உணவு சாப்பிடுகிறவர்களின் சிறுநீரில் சோடியம் அளவு குறைவாக இருந்தது. இரத்த அழுத்தமும் குறைவாக இருந்தது. ஆஸ்திரேலியப் பழங்குடிகளான அபார்ஜைன் மக்கள், பழங்களும் காய்கறிகளும் சாப்பிட்ட போது இரத்த அழுத்தம் நன்றாக இருந்தது. அவர்கள் உப்பு சேர்த்து சமைத்துண்ண ஆரம்பித்ததும் இரத்த அழுத்தம் ஏறிவிட்டது.

    எனவே, இனி, உப்பில்லாத பண்டங்களை வயிற்றுக்குள் போடுவதுதான் வாழ்நாளை அச்சமின்றி நீடித்துத் தரும்! உப்பு சேர்த்து சமைத்த உணவுகளை குப்பையில் போடும் காலம் வந்துவிட்டது. உப்பு அதிகம் உள்ள டின் உணவுகள், டின் சாஸ் வகைகளை தொடவே தொடாதீர்கள்.

    வியாழன், 19 மார்ச், 2009

    இரத்த அழுத்தம்

    இரத்த அழுத்தம் என்றால் என்ன…?உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது. இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

    இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது…?

    பொதுவாக “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஆனால் இந்த உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும் உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன.

    இதில் இரண்டு வகை சொல்கிறார்களே (அதாவது ரீடிங்) அதுபற்றி விளக்கம்?

    அதாவது சிஸ்டாலிக் பிரசர் இதயம் அழுத்திச் சுருங்கும் போது ஏற்படுவது டய்ஸ்டாலிக் பிரசர் என்பது இதயம் தளர்ந்து விரியும் போது ஏற்படுவது இதன் சராசரியான அளவுகள் 120/80 என்பதாகும்.

    உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் யாவை?

    இதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் வருவது. அதனால் தான் இதற்கு அமைதியான ஆட்கொல்லி என்று பெயர். இதன் தாக்கம் என்பது தலைசுற்றல், தலை வலி, நடக்கும்போது மூச்சு வாங்குதல் போல் தெரிதல், மயக்கம் போன்ற தொல்லைகள் ஏற்படலாம்.

    இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் யாவை…?

    உயர் இரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் மூளை, இருதயம், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டு, மாரடைப்பு, பாரிச வாயு, நினைவிழத்தல், சிறுநீரகம் செயலிழப்பு, கண்பார்வை பாதிப்பு, கைகால் வீக்கம், மூக்கில் ரத்தம் வடிதல் போன்றவை ஏற்படும்

    இதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் யாவை…?

    நல்ல உணவுப் பழக்கம் முக்கியம். உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம், நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தினமும் 45 நிமிடம் கை வீசி நடக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இடந்தருதல் ஆகாது. உச்சி மீது வானிடிந்து வீழ்ந்தாலும் கலங்காமல் எதையும் எளிதாகக் கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்தால் என்ன செய்யப் போகிறது உயர் ரத்த அழுத்தம்?

    இதற்கான முதல் உதவிகள் யாவை…?

    முறையான உடற்பயிற்சி, மருத்துவரின் ஆலோசனை அடிக்கடி கேட்டல், மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ளல், பால், பலசரக்கு, பண்டிகைக்குப் பணம் ஒதுக்கல் போல் மருந்துக்கும் மாதம் 300 ரூபாய் ஒதுக்கி வைத்தல், புகை பிடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்தல், எப்போதும் முக மலர்ச்சியுடன் இருத்தல் போன்றவை.

    பி.பி யே வராதவர்கள் அதனை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் உபாயங்கள் யாவை…?

    பி.பி. வராதவர்கள் என்று யாருமே இருக்க வாய்ப்பில்லை. எல்லோருக்கும் வரலாம். காரணம் வயது ஏற…ஏற உடல் உறுப்புக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் நோய்கள் வருகிறது. எப்படி வயது காரணமாக கண்புரை நோய் சதைச் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறதோ அது போல் தான் இதுவும். ஆனால் சில பேருக்கு குறிப்பாக காட்டுவாசிகள் சிலரை பி.பி. அண்டுவதில்லை என்கிறார்கள். அப்படி ஒரு 10 சதவிகிதம் இருக்கலாம். ஆனாலும் சாத்தியம் இல்லை. காரணம் இது வயது சம்பந்தப்பட்டது. அப்படி உங்களில் யாருகேனும் வரவில்லை என்றால் நீங்கள் யோகக்காரர்கள். எல்லோருக்கும் அப்படி ஒரு யோகம் அடித்தால் நல்லதுதானே. சோம்பலை துரத்தி, முகமலர்ச்சி கூட்டி, மன உளைச்சல் நீக்கி வாழ்ந்தால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

    இதுவரை உயர் ரத்த அழுத்தம் பற்றியே கூறினீர்கள். அழுத்தக் குறைவு (லோ பிரசர்) பற்றிக் கூறுங்களேன்…?

    அழுத்தம் குறைந்த (அ) குறைந்த இரத்த அழுத்தம் பற்றிக் கவலையே வேண்டாம். அதனால் தொல்லைகள் இல்லை. அவர்கள் அளவாக உப்புச் சேர்க்கலாம். உணவு விஷயங்களில் கூட உயர் ரத்த அழுத்தக் காரர்களுக்குத்தான் கெடுபிடிகள். இவர்களுக்கில்லை. அதற்காக எப்படியும் சாப்பிடலாம் என்று இல்லை. அளவான நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள் போன்றவை எல்லோருக்கும் அவசியம் தானே?

    செவ்வாய், 17 மார்ச், 2009

    விரட்டுவோம் குறட்டையை

    டாக்டர் ரவி ராமலிங்கம்

    சாதாரணமாக நோயாளிதான் 'எனக்கு இப்படிஇருக்கு டாக்டர் இங்கே வலிக்குது டாக்டர்" என்று தனக்குள்ள பிரச்சினையைச் சொல்வார்.
    ஆனால், குறட்டையைப்பொருத்தவரை நோயாளி எதையும் சொல்லமாட்டார். உடன் வருகிறவர்கள்தான் அவர் விடுகின்ற குறட்டையால்அதிகம் பாதிக்கப்பட்டு "இவர் ரொம்ப குறட்டை விடுறார் டாக்டர். இவர் நல்லா தூங்கிடுறாரு.எங்களுக்குத்தான் தொந்தரவா இருக்கு" என்பார்கள்.
    உண்மையில் குறட்டை விடுகிறவர்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்களா? என்றால் அதுதான் இல்லை.

    நாக்கு அண்ணம் ஆகியவை நாம் அசந்து தூங்குகிறபோது இறுக்கம் தளர்ந்துசுவாசக் குழாய் மேல் படிந்து அழுத்துகிறது. இதனால் சுவாசம் தடைப்பட்டு அதிர்வு உண்டாகிசப்தம் வருகிறது.

    ஆக குறட்டை விட்டால் சரியான சுவாசம் இருக்காது. ஒருவிதத் தடங்கலோடுதான்தூங்க வேண்டியதிருக்கும் என்கிறார் டாக்டர் ரவி ராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:-
    பொதுவாக நமக்கெல்லாம் குறட்டை ஒரு விளையாட்டான விடயமாகத்தான்தெரிகிறது. ஆனால், குறட்டையை விளையாட்டாகஎடுத்துக் கொள்ள முடியாது. குறட்டையினால் உயிரே கூடப் போயிருக்கிறது. குறட்டை விடும்போதுசுவாசம் தடைப் படுவதோடு மட்டுமல்லாமல், சில சமயம்மூச்சுத் திணறல் உண்டாகிவிடும்.

    குறட்டை விட்டுத் தூங்குபவர் அலறியடித்து திடீரென்று எழுவதுஇதனால்தான். விழித்ததும் சுவாசம் திரும்பக் கிடைத்து விடுகிறது. இவ்வாறு உண்டாகிற மூச்சுத்திணறலை "ஸலீப் அப்னியா சிண்ட்ரோம்" என்கிறோம்.

    ஒருவர் ஏழு மணிநேரம் தூங்குகிறார் என்றால், அதில் குறைந்தது 30 தடவை மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்றாலோ, "ஹீரோயிக் ஸ்னோரிங்" என்கிற தீவிர குறட்டைவிடுகிறவர்களாக இருந்தாலோ, விட்டுவிட்டுத்தூங்கக் கூடியவராக இருந்தாலோ அதாவது இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூக்கமும் தலைவலியோடு விழிப்பது, உற்சாகமாக இல்லாமல்இருப்பது போன்ற பாதிப்புள்ளவர்களாக இருந்தாலோ "ஸ்லீப் அம்னீசியா சிண்ட்ரோம்"வர வாய்ப்புகள் உள்ளன.

    மூளையில் இருக்கிற "தூக்கம் சம்பந்தப்பட்ட செல்களில் கோளாறுஏற்பட்டாலும் அதனால் சுவாசம் சரியாக நடைபெறாமல் சுவாச நிலையும் பாதிக்கப்பட்டு அதனாலும் இந்த சிண்ட்ரோம் வரலாம்.

    குழந்தைகளைப் பொருத்தவரை டான்சில் மற்றும் அடினாய்டு சதை வளர்ச்சியால்சுவாசப் பாதை தடைப்பட்டு குறட்டை வரலாம். சிலருக்குத் தாடை சின்னதாக இருக்கும். நாக்குபெரியதாக இருக்கும். வாயில் இடம் போதாமல் சுவாசப் பாதை அடைத்துக் கொண்டிருக்கும். இதனாலும்குறட்டை வரும்.

    தவிர, மூக்குச்சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான மூக்கு எலும்பு வளைந்து இருத்தல், பாலிப் சதை வளர்ச்சி, மூக்கடைப்பு போன்றவையாலும் தொண்டை மற்றும்குரல் வளையில் ஏற்படுகிற அடைப்புகளாலும் குறட்டை வரும்.
    சாதாரணமாக ஒருவர் விழித்துக் கொண்டிருக்கும்போது அவருடைய ரத்தத்தில்நூறு சதவிகிதம் ஆக்சிஜன் இருக்கிறது என்றால்,அவர் தூங்குகிற வேளையில் 90 சதவிகிதஆக்சிஷன் தான் இருக்கும்.

    இது சாதாரண நிலையில். ஆனால், ஒருவர் குறட்டை விட்டுத் தூங்குகிறார் என்றால், சுவாசம் தடைப்பட்டு அவருடைய ரத்தத்தில் ஆக்சிஜன்அளவு எழுபது சதவிகிதமாகக் குறைந்துவிடும்.

    இப்படியே தொடர்ந்து குறட்டை விட்டுக் கொண்டிருந்தால், குறைச்சலான ஆக்சிஜனால் மூளைத் திறன் குறைந்து, மறதி,எரிச்சல், கோபம் போன்ற பாதிப்புகள்ஏற்படு கிறது. ஆக்சிஜன் குறைவினால் இதயம் செயலிழந்து போகும் அபாயம் ஏற்படுகிறது.

    தவிர குறட்டை விடுவது தொடர்ந்தால் ரத்தக் கொதிப்பு, நெஞ்சு வலி, பக்க வாதம் போன்றவையும் ஏற்படலாம்.
    குறட்டை விடுவதைச் சரி செய்தாலே இவற்றையெல்லாம் சரி செய்துவிடலாம்."ஸ்லீம் - லே-பரட்டரி" என்று இப்போது நிறைய வந்துவிட்டன. நோயாளியின் குறட்டைஎந்த அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடியது என்பதை இங்கே கணித்துச் சொல்கிறார்கள்.
    நோயாளியை இங்கே ஓர் இரவு தூங்கக் கூறி அந்த சமயத்தில் அவருடையகுறட்டை அளவு, இதயத் துடிப்பு, மூளையின் செயல்பாடு, கண்,அடிவயிற்றின் அசைவு, மூக்கு மற்றும்வாய்ப் பகுதிகளில் காற்றின் போக்கு, நாடித் துடிப்பு, ரத்தத்தில் இருக்கிற ஆக்சிஜன் அளவு, எத்தனை முறை மூச்சுத் திணறல் உண்டாகிறது இப்படிபலதரப்பட்ட விடயங்களைக் கவனித்து அந்த நோயாளியின் குறட்டை தூக்கத்தை அக்கு வேறு ஆணிவேறாக அலசி விடுகிறார்கள்.

    அந்த முடிவை வைத்து அவருடைய குறட்டையின் வலிமையை உணர்ந்து சிகிச்சைதரப்படுகிறது. லேப்களில் கண்டுபிடிக்கிற இந்த அக்குவேறு ஆணி வேறு அலசலை "பாலிசோம்னோகிராம்"என்கிறோம்.