புதன், 25 மார்ச், 2009
ஒற்றைத் தலைவலி (Migraine)
அறிகுறிகள்:
மைக்ரேன் ஒரே பக்கமாக வலிக்கக் கூடிய தலைவலி என்றாலும், தலை முழுவதும் வலி தெரியும். தலையின் மேல் பகுதியிலோ, பக்கவாட்டிலோ துடிப்பது போலவும் அடித்துக் கொள்வது மாதிரியும் லேசாக வலி ஆரம்பிக்கும்.
படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். ஒலியைக் கேட்கவோ, ஒளியைப் பார்க்கவோ கூச்சமாக இருக்கும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும்.
வகைகள்
ஒற்றைத் தலைவலி இரண்டு முக்கிய வகைகளில் அறியப்படுவதாக உள்ளது.
1. கிளாசிக் மைக்ரேன் (Classic Migraine)
தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை (avra) இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது.
தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும்.
நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு.
கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்தவலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.
பொதுவான மைக்ரேன்: (Common migraine)
மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.
ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?
மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன. பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
ஒற்றைத்தலைவலி பரம்பரை நோயா?
ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. கணவன்_மனைவி இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால் பிள்ளைகளுக்கு 75% வாய்ப்பு உண்டு. இருவரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50% வாய்ப்புகள் உண்டு. அவ்வளவுதான். மற்றபடி, கட்டாயம் வரும் என்று சொல்லமுடியாது.
விடுதலைபெற நம்பிக்கையான வழிகள்:
அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். இதற்குப் பல வழிகள் இருந்தாலும் உங்களுக்கு உதவ சிலவழிகள்.
1. உணவுமுறையில் மாற்றம்:
சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.
2. முறையான தூக்கம்:
தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.
3. உடற்பயிற்சி:
உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.
4. சுற்றுச்சூழலில் கவனம்:
அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.
5. மது, புகை, காபி தவிர்த்தல்
மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.
6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம்.
அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.
7. தடுப்புமுறைகள்:
ஒற்றைத்தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.
8. மருந்துகள்:
அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்து வர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இளமை காக்க ஆறு யோசனைகள் !
மன்னிப்பது நல்லது!
பிறரைக் குறை கூறிக்கொண்டோ அல்லது திட்டிக் கொண்டே தங்கள் வேலைகளை நாள் முழுவதும் சிலர் பார்ப்பார்கள். இவர்களுக்கு வயிறு சம்பந்தமான கோளாறுகள் வரும். இந்தக் கோளாறு இருந்தால் உங்களுக்குக் கெடுதல் செய்தவர்களை உடனடியாக மனப்பூர்வமாக மன்னித்து மறந்துவிடுங்கள். மருந்து இன்றியே வயிற்றுக் கோளாறுகள் இதனால் விரைந்து குணமாகும் நம்புங்கள்.
வாந்தி வருவது போல் இருந்தால்…
வயிற்றுக் கோளாறுகளை முன்கூட்டியே தடுக்க ஒவ்வொரு வேளை உணவிற்குப் பிறகும் உலராத ஓர் இஞ்சித்துண்டு சாப்பிடவும். இதே போல வாந்தி வருவதை நிறுத்த உலர்ந்த சிறிய இஞ்சித்துண்டை உப்புடன் சாப்பிடவும். எப்படிப்பட்ட வாந்தியும் உடனே அமைதியாகி ஓயும்.
உடல் நாற்றம் நீங்க…
மழைக்காலத்தில் வேப்ப இலையை அரைத்து இரண்டு டீஸ்பூன் அளவு அந்தத் துவையலை குளிக்கும் தண்ணீரில் கலக்கிவிட்டுக் குளிக்கவும். இது உடல் நாற்றத்தைப் போக்கும் (வேப்ப எண்ணெய்தான் நாறும்). தோலில் எரிச்சல் குணமாகும். வீட்டில் பூச்சிகள் இருந்தால் அது உங்களைக் கடிக்காது.
விரல் சுட்டுவிட்டால்!
சூடான பாத்திரங்களை அடுப்பில் இருந்து இறக்கும்போது விரல்கள் சுட்டுவிட்டால் ஐஸ் துண்டுகளை அந்த இடத்தில் வைக்கவும். இதனால் கொப்பளமும் வராது. ரெப்ரிஜிரேட்டர் இல்லாதவர்கள் உடனடியாகப் பக்கத்து வீட்டிலாவது ஐஸ் துண்டுகளைப் பெறுவது நல்லது.
திரைப்படப் பாடல்களால் உடல் நலம் உண்டு!
நல்ல உடல் நலம்இ நல்ல மனவளம் ஆழ்ந்த அமைதி எளிதில் ஓய்வு எடுக்க ஆழ்ந்த தியானம் செய்ய படுத்து உடனே தூங்க 1250 ரூபாயில் ஒரு காம்பாக்ட் டிஸ்க் வந்துள்ளது. இதில் கர்நாடக இசைதான் உள்ளது. ஆன்ட்ருவெல் என்பவர் ஆராய்ந்து ஒலிப்பதிவு செய்த இசைத்தொகுப்பு இது.
மறதி வியாதி மறைய…
வயதானவர்களுக்கு வரும் மறதியிலிருந்து விடுபடத் தினமும் வைட்டமின் ‘ஈ’ மாத்திரையைச் சாப்பிட வேண்டும். அளவு : 2000 சர்வதேச யூனிட்டுகள். சற்று அதிகமாகச் சாப்பிட்டாலும் கெடுதல் இல்லையாம். ஆனால் டாக்டர்தான் மாத்திரை அளவை முடிவு செய்ய வேண்டும். அமெரிக்காவில் உள்ள தேசிய முதியோர் நல அமைப்பினர் இரண்டு ஆண்டுகளாக இதே அளவு கொடுத்துவந்தால் பல ஞாபக மறதி நோய்க்காரர்கள் நன்கு குணம் பெற்றனர்.
வாழ நினைத்தால் வாழ முடியும்!
குண்டு பாய்ந்தும் 76 வயது வரை நலமாக வாழ்ந்த மனிதர்!
1822ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாள்… வில்லியம் ப்யூமண்ட் என்ற இயவயதுக் கனடா இராணுவ டாக்டருக்கு அவசரத் தொலைபேசி அழைப்பு.
18 வயதான அலெக்ஸிஸ் செயின்ட் மார்ட்டின் என்ற விலங்குகளின் தோல்களை விற்கும் வியாபாரி ஒருவர் மீது எதிர்பாராத விதமாகக் குண்டு பாய்ந்துவிட்டது என்ற தொலைபேசித் தகவலைத் தொடர்ந்து டாக்டர் ஓடினார்.
மக்கள் அதிகமுள்ள கடைவீதியில் சுடப்பட்ட இந்த வியாபாரி பிழைத்திருக்கவே முடியாது. காரணம்இ இடப்பக்கம் இடுப்பு எலும்புக்கு மேல் பெரிய அளவு ஓட்டை ஏற்பட்டு அந்த இடமே வெந்து கருகிக் காணப்பட்டது. டாக்டர் அந்த இடத்திலேயே இரத்தத்தைக் கொடுத்துஇ 36 மணி நேரத்திற்குள் வியாபாரி இறக்க நேரிடலாம் என்று கூறிவிட்டார்.
ஆனால் மார்ட்டின் பிழைத்து எழுந்தார்! ஓர் அங்குலம் அளவுக்கு இடுப்புக்குக் கீழ் அகலமான ஓட்டை ஆழத்தில் வயிற்றுத் தசையின் கடைப் பகுதியும் தெரிந்தது. 76 வயதுவரை இந்த ஓட்டையுடன் நலமாக வாழ்ந்தார். மிருகங்களை கண்ணி வைத்துப் பிடித்து தோல் வியாபாரமும் செய்தார்.
வயிற்றில் உள்ள ஓட்டையுடன் எப்படி நலமாக வாழ்ந்தார்? காய்ச்சல் என்று இவர் படுத்ததே இல்லை. மேலும் இவர் சாப்பிட்ட உணவும் எப்படி சரியாக ஜீரணமானது? முக்கியமாக பெரிய ஓட்டையுடன் காணப்பட்ட இவர் அடுத்த 58 ஆண்டுகள் வாழ்ந்தது எப்படி? அதிசயம்தான்!
செவ்வாய், 24 மார்ச், 2009
உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு
ஒமேகா-6 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:
இரத்தத்தின் ஒட்டும்தன்மை அதிகமாகிறது.
இரத்தக்குழாய்கள் கடினமாகி அவற்றின் மீள்தன்மை குறைகிறது.
இரத்த அணுக்களின் செல்சுவர்கள் கெட்டியாகி, நெகிழ்வுத்தன்மை குறைகிறது.
இந்தக் காரணங்கள், மூளை மற்றும் இதயப்பகுதியில் உள்ள இரத்தக்குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்த வழி செய்கின்றன.
ஒமேகா-3 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:
இரத்தத்தின் ஒட்டும் தன்மை குறைந்து, மீள்தன்மை அதிகரித்து, இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களின் செல்சுவர்களில் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பதால் இரத்தக்குழாய்களில் சிறிய அடைப்பு இருந்தால்கூட சிவப்பு அணுக்களின் நெகிழும்தன்மையினால் இரத்தஓட்டம் உறுப்புகளைச் சென்றடைகிறது.
மனிதன் தோன்றிய காலத்தில் அவனது முக்கிய உணவாக கடல் உணவுகளே இருந்தன. தாவர எண்ணெய்கள் அனைத்தும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையே. ஒர் ஆராய்ச்சி முடிவின்படி அமெரிக்க ஆண்களுக்கு இதய நோய்கள் மிக அதிகமாகவும், கிரீன்லாந்து எஸ்கிமோக்களுக்கு மிகக்குறைவாகவும் வருவதாக கண்டறியப்பட்டது. இரத்தத்தில் ஒமேகா-6 ன் அளவு அமெரிக்கர்களுக்கு 80%, பிரெஞ்சுக்கார்களுக்கு 65%, ஜப்பானியர்களுக்கு 50%, எஸ்கிமோக்களுக்கு 22% என்று புள்ளிவிவரம் கூறுகிறது. மேலும் ஒமேகா-3 க்கு புற்றுநோய், பக்கவாதம் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மீன் குறைவாக உண்ணும் விவசாயியைக் காட்டிலும், மீன் அதிகமாக சாப்பிடும் மீனவருக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு 30% குறைவு என்பது சரியான ஆதாரம் இல்லையா?
தகவல்: மு.குருமூர்த்தி
நவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்
ஆரோக்கியத்திற்கும், வசீகரமாகத் தோன்றுவதற்கும், ருசியாக சாப்பிடுவதற்கும், நன்றாகப் பேசுவதற்கும் பற்கள் இன்றியமையாதவை. பற்களின்ஆரோக்யம் உடலின் ஆரோக்யம். நமது முகத்தைக் கண்ணாடி பிரதிபலிப்பது போல் உடலில் தோன்றும் பல நோய்களின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை வாய் மற்றும் பற்களில் ஏற்படும் இராசயன மாறுதல்களைக் கொண்டே கண்டுபிடித்துவிடலாம். எனவே நமது உடலின் ஆரோக்யத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக நமது வாய் மற்றும் பற்கள் விளங்குகின்றன. மருத்துவ உலகில் "Mouth is the Mirror of our Body" என்னும் வாசகம் மிகவும் பிரபலமானது. பல் போனால் சொல் போச்சு என்னும் தமிழ் பழமொழியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
பற்களின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள நவீன சிகிச்சை முறைகள்
1) பல் சொத்தையும், சிகிச்சை முறையும்:
பற்களில் சொத்தை ஏற்பட்டவுடன் அதை கவனித்து பற்களை அடைத்துக் கொள்ள வேண்டும். பற்களை அடைப்பதற்கு சிமெண்ட, வெள்ளி, தங்கம் மற்றும் பல்வேறு உலோகக் கலவைகளும், காம்போசிட் ரெசின் என்னும் பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்த பொருட்களும் இருக்கின்றன. பல்லின் தன்மைக்கேற்ப தகுந்த பொருளைக் கொண்டு பல் மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.
2) உடைந்த பற்களும், பற்கூழ் சிகிச்சை முறையும்:
பற்கள் உடைந்தாலோ, பற்களின் மீது அடிப்பட்டாலோ, சில சமயங்களில் அப்பற்கள் நிறம் மாறிக் கொண்டே வரும். பார்ப்பதற்கு விகாரமாகவும், பற்களின் வேர்களைச் சுற்றிக் கிருமிகளும் பரவும். இதனால் உடலின் முக்கிய பாகங்கள் பாதிக்கப்படலாம்.
2.அ) பற்கூழ சிகிச்சை (ROOT CANAL TREATMENT)
இதற்கு பற்களின் உட்பக்கமாக வெளியே தெரியாமல் ஒரு துவாரம் போட்டு பழுதுபட்ட பற்கூழை (Pulp) எடுத்துவிட்டு அந்தப் பகுதியை அடைத்து விடுவோம். அதன் பின் பற்களின் மேல் பரப்பில் உள்ள எனாமல் பகுதியை தேய்த்து எடுத்துவிட்டு மற்ற பற்களின் நிறத்திலேயே பீங்கான மற்றும் பிளாஸ்டிக்கினால் ஒரு உறை செய்து நிரந்தரமாக இருக்கும்படி பொருத்தி விடலாம்.
2.ஆ) பற்கள் சிறிதளவே உடைந்திருந்தால் அதில் காம்போசிட் என்ற பொருளை வைத்து நீலநிற ஒளியைப் (Ultra Violet) பாய்ச்சி முழு பல்லாக கொண்டு வரமுடியும். இந்த நவீ£ன சிகிச்சைக்கு Light Cure Treatment என்று பெயர்.
2.இ) பற்கள் பெரும் பகுதி உடைந்திருந்தாலோ, பல்லை எடுக்கும் நிலை ஏற்பட்டாலோ, பல் எடுத்த இடத்திலேயே எலும்பில் ஒரு துளையிட்டு அந்த எலும்புக்குள் Titanium என்ற உலோகக் கலவையினால் ஆன ஒரு அங்குல (1 or 11/2 inch) நீளமுள்ள ஸ்க்ரூவைப் பொருத்தி விடுவார்கள். பின்னர் அதன் மேல் பீங்கானில் பல்லைப் போல ஒரு உறை செய்து நிரந்தரமாகப் பொருத்தி விடலாம். இதற்கு Implant பற்கள் (Teeth) என்று பெயர்.
3) பல் ஈறு நோய் மற்றும் சிகிச்சை முறை:
பற்களுக்கு இடையில் படியும் காரைகளினால் பற்களின் ஈறுகள் கெட்டு இரத்தம், சீழ் கசியும், வாய் துர்நாற்றம் ஏற்பட காரைகளும் ஒரு காரணம். மேலும், வெற்றிலை பாக்கு போடுவதாலும், புகை பிடிப்பதாலும் பொடி போடுவதாலும், பற்களில் கறை படியும். இதற்கு பற்களை சுத்தம் செய்ய வேண்டும். தற்போது Ultrasonic Scaler எனப்படும் எலக்ட்ரானிக் கருவியைப் பயன்படுத்தி எனாமல் பகுதியைப் பாதிக்காமல் பற்களில் படிந்துள்ள காரை மற்றும் கறைகளை நீக்கிவிடலாம்.
4) தாடை எலும்பு முறிவும், சிகிச்சையும்:
வாகனங்கள் மூலமாக விபத்து ஏற்படும் போது தாடை எலும்புகள் உடைந்து விடுவதும் உண்டு. உடைந்த தாடை எலும்பில் பற்கள் இருக்கும் போது மேல் பற்களையும், கீழ் பற்களையும் சரியான நிலையில் வைத்து கம்பிகள் மூலம் கட்டி உடைந்த எலும்புகளை சரியான நிலையில் பொருத்திவிடலாம்.
இப்போதுள்ள நவீன சிகிச்சை முறையில் உடைந்த தாடை எலும்புகளில் எவர்சில்வர் தகடுகளைப் பொருத்தி அவைகளை நிரந்தரமாக வைத்து விடுவார்கள். இந்த நவீன சிகிச்சை செய்வதால் உடனேயே வாயை திறந்து பேசவும், சாப்பிடவும் வசதியாக இருக்கும்.
3) வாய் புற்று நோய் மற்றும் சிகிச்சை முறை
வாய் புற்று நோய்க்கு 3 காரணங்கள் உள்ளன. அவையாவன.
-
SharpTeeth (கூர்மையான பற்கள்),
-
Sepsis (வாயில் சீழ் வடிதல்),
-
Spiced Food (கார வகை உணவுகள்),
-
Syphilis (பல்வினை நோய்),
-
Smoking (புகை பிடித்தல்).
மேற்கூறிய காரணங்களால் வாய்புற்றுநோய் வருவதால் ஒழுங்கான பழக்க வழக்கங்களை கடைபிடித்து, வெற்றிலை பாக்கு, புகையிலை தவிர்த்து, துலக்குவதற்கு மிருதுவான பொருட்களை உபயோகிப்பதாலும், அதிக காரவகை உணவுகளை தவிர்ப்பதாலும் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
ஏதாவது ஒரு காரணத்தால் வாயில் புண் ஏற்பட்டால் அந்தப் புண் பத்து நாட்களுக்கு மேல் ஆறாமல் இருந்தால் கண்டிப்பாக பல் மருத்துவரை அணுகி அது புற்று நோயின் அறிகுறியா? என்று சோதித்து தேவையான சிகிச்சை மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டால் அறுவை சிகிச்சை மூலமாகவோ, கதிர்வீச்சு மூலமாகவோ, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமாகவோ ஆரம்ப நிலையிலேயே புற்று நோயைக் குணப்படுத்தி விடலாம்.
6) ஒழுங்கற்ற பற்களும், பல்சீரமைப்பு சிகிச்சையும்:
குழந்தைப் பருவத்தில் கை சூப்பும் பழக்கத்தினாலும், நாக்கைத் துருத்திக் கொள்வதாலும், கீழுதட்டைக் கடிப்பதாலும், உறங்கும் போது வாயினால் மூச்சுவிடுவதாலும், பற்கள் தூக்கலாகவும், ஏறுமாறாகவும் அமைந்து விடுகின்றன. பற்களின் அமைப்பு ஒழுங்காக, வரிசையாக இல்லாமல் சீர்கெட்டு இருந்தால் முகத்தின் வசீகரம் குறையும்.
இதற்கு ஆர்த்தோடான்டிக் அப்ளையன்ஸ் எனப்படும் கிளிப் போட்டு சரி செய்யலாம். இந்த சிகிச்சை முறையில் நிறைய வகைகள் உண்டு.
இது வரை குறிப்பிட்டுள்ளவை சில நவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகளாகும். நமது பற்களைப் பாதுகாத்துக் கொள்வதும், வாயை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நமது முக்கியக் கடமையாகும். வாய் சுத்தமாக இல்லாவிட்டாலும், பற்கள் பழுதாகி இருந்தாலும் நமது உடலில் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு நமது உடல் ஆரோக்யம் கெடலாம். ஆதலால் ஒருவர் தன் உடல் நலத்தைக் காக்க விரும்பினால் வாய் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளல் அவசியம்.
திங்கள், 23 மார்ச், 2009
நீரழிவு நோய் (டயாபிடிக்ஸ் என்றால் என்ன?)
காரின் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் இருந்தாலும், அதை இஞ்சினுக்கு செலுத்த பூயல் பம்ப் (Fuel pump) தேவைப் படுகிறது. நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreass) என்னும் சுரப்பி உள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்ல. இதனால் இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு அதிகமாகிறது. |
இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரை இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப் பிடிக்காமல் இருந்தால் மோசமன விளைவுகளுக்கு ஆளாகிவிடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.
சரியான முறையில் கவனம் செலுத்தினால் நீரழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம். அதிகப்படியான கவனத்துடன் "சுய கட்டுப்பாடுடன்" வாழவேண்டும். சுய கட்டுப்பாடு என்பது சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல், இரத்தப் பரிசோதனைகளை சரியான கால கட்டங்களில் செய்தல். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துக்களை உட்கொள்வது.
நீரழிவு நோய் மூன்று வகைப்படும்
டைப் 1 டயாபிடிஸ் (Type 1 diabetes)
டைப் 2 டாயாபிடிஸ் (Type 2 diabetes)
ஜெஸ்டேஷனல் டயாபிடிக்ஸ் (Gesgational diabetes) டைப் I நீரழிவு நோய்
இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் (Juvenial) அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ் (இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச் சார்ந்தவர்கள். எதிர்ப்பு சக்தி வலு இழுக்கும் போது, இத்தொற்றுக் கிருமிகள் கணையத்தின் (pancreas) இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெற்ற கொழுப்பு மற்றும் சக்கரையை இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனை பயன் படுத்த முடியாமல் போகிறது. இவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாது. இது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும் போது இது திடீர் என்று வருகிறது. இதை சரி செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவத்தின் முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.
டைப் I நீரழிவு நோய்யின் குணாதிசியங்கள்
-
பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது
-
அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
-
இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல
-
இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
-
சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.
-
உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம் இருப்பின் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.
டைப் II நீரழிவு நோய்
இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும். பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். தற்சமய ஆய்வின் படி, இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும், உடல் உழைப்பைச் சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.
இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (progressive) ஒரு நோயாகும். குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய், மற்றும் கண் தெடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம். இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக் குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும், மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல் சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.
டைப் II நீரழிவு நோயின் குணாதிசியங்கள்
-
பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள்
-
அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்
-
பொதுவாக இது பரம்பரை நோய்
-
பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பார்கள்.
இரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
ஜெஸ்டேஷனல் நீரழிவு நோய்
கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் II நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
உணவு: உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும். மாவுச்சத்து நாம் உண்ணும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் கிடைக்கிறது. கோதுமையில் நார்பொருள் (fibre content) இருப்பதால், சக்கரை இரத்தத்தில் ஒரே சீராக சேருகிறது. காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. பூமிக்கு கீழே விளைவதை தவிர்க்கவேண்டும் (உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட்). பழங்களில் சப்போட்டா, பழாப்பழம், சீத்தா போன்றவற்றை தவிர்க வேண்டும்.
உடற்பயிற்சி: உடற்பயிற்சி என்பது தினம் 30-45 நிமிட சுறுசுறுப்பாக நடப்பது. முடிந்தவர்களுக்கு 30 நிமிட ஓட்டம் (சீரான ஓட்டம்). இருதய நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
சிகிச்சை: இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும். சரியான மருத்துவரிடம் முறயான சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவரின் அலோசனைப்படி இரத்த பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை செய்ய வேண்டும். உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். கண் மருத்துவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். இவற்றை கடைப்பிடித்தால் ஆரோக்கிமான வாழ்வு உண்டு.
ஞாயிறு, 22 மார்ச், 2009
வலிப்பு நோய்
வலிப்பு நோய் என்றால் என்ன?
மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும் போது ஏற்படும் விளைவே வலிப்பு நோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்றும் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.
வலிப்பு நோய் யாரை பாதிக்கும்?
யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். மொத்த மக்கள் தொகையில் 100க்கு 3 முதல் 5 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நோய் அறிகுறிகள் யாவை?
இது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது.
-
கை, கால் இழுத்தல்
-
வாயில் நுரை தள்ளுதல்
-
சுய நினைவு மாறுதல்
-
உடலில் உள்ள பாகம் துடித்தல் (வெட்டுதல்)
-
கண் மேலே சொருகுதல்
-
சில சமயம் சுய நினைவின்றி சிறுநீர் கழித்தல்
-
திடிரென மயாக்கமடைந்து விழுதல்
-
கண் சிமிட்டல்
-
நினைவின்றி சப்பு கொட்டுதல் (வாய் அசைத்தல்)
-
மற்றும் சில நிமிடங்கள் தன் சுய நினைவின்றி பேசுதல் போன்றவை வலிப்பு நோய்ன் அறிகுறிகள்.
வலிப்பு நோய் எதனால் வருகிறது?
-
மூளையில் பூச்சிக்கட்டி (Neurocysticercosis)
-
மூளையில் காச நோய் (Tuberculoma)
-
தலைக் காயம் (Head Injury)
-
குழந்தைகளுக்கு சுரம் ஏற்படும் போது (Febrile Convulsions)
-
மூளை காய்ச்சல் (Brain Fever)
-
மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கும் போது
-
மூளையில் புற்று நோய் (Brain Tumer)
-
உறக்கமின்னை
-
போதைப் பொருள் உபயோகித்தல்
மற்றும் சிலருக்கு எக்காரணமும் இன்றி வரலாம்
இது பரம்பரை வியாதியா?
பெரும்பாலும் 100க்கு 90 பேருக்கு இது பரம்பரை வியாதி இல்லை. மிக குறைந்த பேருக்கே இது பரம்பரையின் பாதிப்பாகும்.
இந்த நோய் எந்த வயதில் வரும்?
இந்த நோய்க்கு வயது வரம்பு கிடையது. குழந்தை முதல் முதியோர் வரை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.
இந்த நோய் உள்ளவர்களுக்கு செய்யப்படும் சோதனைகள் யாவை?
முதலில் மருத்துவர் நோய்க்கான அறிகுறிகளை கேட்டறிந்து அதன்பின் வலிப்பு நோயினை வகைப்படுத்துகிறார். பின்னர் வியாதிக்கு ஏற்ப,
-
EEG: மூளையின் மின் அதிர்வைப் வரைபடமாக்குதல்.
-
CT Scan: மூளையின் பாகங்களை கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்தல்.
-
MRI Scan: தேவைப்படின் காந்த அதிர்வு மூலம் மிகத்துல்லியமாக மூலையின் பாகங்களை படம் எடுத்தல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இந்த நோய் உள்ளவர்கள் எனன செய்ய வேண்டும்?
அருகாமையில் உள்ள மூளை நரம்பியல் மருத்துவ நிபுணரை சந்தித்து நோயின் வகை, நோய்க்கான காரணம் ஆகியவற்றை பரிசோதனைகள் மூலம் அறிந்து மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்ந்து மருந்து உட்கொள்ள வேண்டும்.
எவ்வளவு காலம் மருந்து உட்கொள்ள வேண்டும்?
இது வியாதியின் வகை மற்றும் காரணத்தை பொருத்து மறுபடுகிறது பெரும்பாலும் 3 முதல் 5 வருடம் வரை உட்கொள்ள வேண்டி இருக்கும். பின்னர் தேவையான பா¢சோதனைகளுக்கு பிறகு மருந்துகளை மெல்லக் குறைத்து அதன் பின் நிறுத்த வேண்டும்.
இந்த நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
தாராளமாக செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்து அவா¢ன் அலோசனைப்படி மருத்தினை தொடர்ந்து உட்கொள்ளவும்.
இந்த நோய் உள்ளவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
தாராளமாக, வலிப்பு நோய் தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கும். ஆனால் முறையான வலிப்பு நோய் மாத்திரையும் ·போலிக் ஆசிட் (Folic Acid) என்ற சத்து மாத்திரையும் சாப்பிடும் போது சுகப்பிரசவம் காணலாம். கருத்தா¢க்கும் முன் உங்கள் மருத்துவரை அவசியம் சந்திக்கவும்.
இந்த நோய் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டலாமா?
வலிப்பு இல்லாமல் குறைந்தது 6 மாதங்கள் ஆன பிறகு வாகனங்கள் ஓட்டலாம்.
வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:
-
தவறாமல் மருந்து சாப்பிட்டால் வலிப்பு இல்லாமல் இருக்கலாம்.
-
பள்ளி, கல்லு¡¢ மற்றும் அலுவலகங்களுக்கு செல்லலாம்.
-
விளையாடலாம், உடற்பயிற்சி, தியானம் மற்றும் பயணம் செய்யலாம்.
-
திருமணம் செய்து கொள்ளலாம், உடலுறவு கொள்ளலாம், சாதாரணமாக குழந்தைகளைப் பெறலாம்
-
உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.
-
நல்ல உணவு, உடற்பயிற்சி, தியானம் மற்றும் சிந்தனை உங்களை நல்வழிப்படுத்தும்.
-
நீங்கள் மற்றவர்களைப் போல் நன்கு வாழலாம்.
வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை:
-
உங்கள் மருத்துவரை கலந்து அலோசிக்காமல் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவோ அல்லது வேறு மருந்துக்கு மாறவோ கூடாது.
-
நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும்.
-
தேவையற்ற மன உளைச்சல் கூடாது.
-
மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் வலிப்பு வருவதை தூண்டலாம்.
-
நகரும், அசையும் உயிருக்கு ஆபத்தான இயந்திரங்கள் கொண்டு வேலை செய்யக் கூடாது.
-
அதிக நேரம் தொலைக்காட்சி (TV) பார்க்கக் கூடாது.
முறையான சிகிச்சை செய்ய வில்லை என்றால்?
ஒவ்வொரு முறை வலிப்பு வரும் போதும் மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்பு அடைகின்றன. இது நாளடைவில் மூளை வளர்ச்சியை பாதிக்கும், எனவே முறையான மருந்துகள் சாப்பிட்டு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
சனி, 21 மார்ச், 2009
ஒவ்வாமை(அலர்ஜி)
பொதுவாகவே, பல நுற்றுக்கணக்கான பொருட்கள் ஒவ்வாப் பொருட்களாக இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதால், ஒவ்வாமை இயல்புடைய ஒருவருக்கும் குறிப்பாக, எந்தப் பொருள் ஒவ்வாமை அறிகுறிகளை அல்லது கேடுகளை அல்லது ஒவ்வாமை நோய்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல!
இருந்தாலும், ஒவ்வாமையினால் தொல்லைக்குள்ளான ஒருவருடைய சுற்றுப்புறத்தில், என்னென்ன பொருட்களெல்லாம் இருக்கின்றன, அவற்றுள்அதிகமாக ஒவ்வாப் பொருளாக இருக்கக்கூடிய பொருட்கள் என்னென்ன என்பதை அறிந்துக்கொண்டால், ஒருவருக்கு ஒவ்வாமைக் கேடுகளை ஏற்படுத்தும் பொருளை அல்லது பொருட்களை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஒவ்வாமை தன்மையுடைய ஒருவருக்குப் பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களே ஒவ்வாப் பொருட்களாக இருக்கின்றன என்பதை நாம் இங்கு தெரிந்து கொள்ள வேண்டும்!
நோய் நிர்ணயம் _ சிந்தித்தறிதல்
ஒருவருக்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட என்னென்ன பொருட்கள் காரணங்களாக உள்ளன என்பதைக் கண்டறிய, முதலில் ஒவ்வாமை தன்மையுடையவர் கூறும் அறிகுறிகளை ஒன்றுவிடாமல் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அவருடைய குடும்பத்தைப் பற்றியும், அவர் செய்யும் தொழிலைப் பற்றியும் வாழும் இடத்தைப் பற்றியும் மறக்காமல் கேட்டறிய வேண்டும். பொதுவாக ஒவ்வாமை நோய்கள், ஒரு மரபுக் கோளாறு போலவே தெரிகின்றன. குடும்பத்தில் ஏற்கனவே வேறு யாருக்காவது ஆஸ்துமா, கரப்பான், தும்மல், அரிப்பு போன்ற ஒவ்வாமை நோய்கள் உள்ளவர்களே, ஒவ்வாமையினால் அதிகமாகப்பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில், ஒரு குடும்பத்தில் யாராவது இதுபோன்ற ஏதாவது ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டிருந்தால், அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறுயாராவது ஒவ்வாமையினால் கட்டாயம் தொல்லைக்குள்ளாவார்கள் என்றும் சொல்லமுடியாது. அதே போல ஒன்றுபோலுள்ள இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை, ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இன்னொரு குழந்தை எந்தவிதமான ஒவ்வாமை கேட்டையும் பெற்றிருக்காது என்பதை நாம் அறியவேண்டும்.
உதாரணத்திற்கு, ஒருவருக்கு ஆஸ்துமாநோய் இருந்தால் அவருடைய ஒவ்வாமையியல்புடைய சந்ததிகளுக்கும் அதே ஆஸ்துமா நோய்தான் வரவேண்டும் என்பதில்லை. தும்மல்நோய், கரப்பான் எனப்படும் ஒவ்வாமைத் தோல் நோய் போன்ற வேறு ஒவ்வாமை நோய்களினாலும் அவர்கள் தொல்லைக்குள்ளாகலாம். இவைகளைப் பற்றியெல்லாம் இவ்வளவு விரிவாக, ஒவ்வாமையியல்புடையவரிடம் அறிந்து கொள்ள நாம் முயற்சிப்பதைப்போல, அவர் செய்யும் தொழிலுக்கும், ஒவ்வாமைக்கும் இருக்கின்ற மிக நெருங்கிய தொடர்பைப் பற்றியும் சிறிது விளக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது.
நோய் நிர்ணயம் சோதித்தறிதல்
இதுபோன்ற ஒவ்வாமை தொடர்பான விவரங்களையெல்லாம் கேட்டறிந்து கொண்ட பின்னர் ஒவ்வாமை இயல்புடையவரைத் தலை முதல் கால் வரை கூர்ந்து கவனித்து, ஒவ்வாமை தொடர்பான மற்ற அறிகுறிகளான சிவந்த நீர் வடியும் கண்கள், காது, நுனி மூக்கு மேல்கோடு மூக்குத்தண்டு வளைவு, எலும்புக் காற்றறை அழற்சி சொத்தைப் பல், தொண்டை நிணத்திசு அழற்சி மூக்கடித்தசை வளர்ச்சி தொற்றுக்கள், தோல்நோய்கள், மூச்சுவிடுவதில் கடினம் அல்லது மூச்சை வெளிவிடும்போது மெல்லிய சத்தம் போன்ற கோளாறுகள் ஏதேனும் தெரிகிறதா என்று எங்களைப் போன்ற ஒவ்வாமை, ஆஸ்துமா, அக்குபங்சர் மருத்துவர் பரிசோதிக்க வேண்டும்.
நோய் நிர்ணயம் _ ஆய்ந்தறிதல்
சாதாரணமாக, மூக்கு உட்புறச் சவ்விலுள்ள ஒவ்வாமை நோய்களுக்கே உரித்தான, அதிலும் குறிப்பாக தும்மல் நோய் கண்டவர்களுக்குச் செய்யப்படும் மூக்குச் சளி ஈசினோபில்களின் எண்ணிக்கை மூலமும், ஒரு சிறிய இரத்தப் பரிசோதனை மூலமும் (CBC, AEC) நோயாளி ஒவ்வாமை யினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இரத்தத்தில் பொதுவாக, பலவகையான இரத்த வெள்ளை அணுக்கள் இருக்கும். இவற்றுள் ஒருவகை இரத்தச் செவ்வரி வெள்ளையணுக்கள் (Eosinophils), இரத்தப் பரிசோதனைக் கூடங்களில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் இயோசின் (Eosin) எனப்படும் ஒரு வகை நிறமூட்டியை எளிதாக உறிஞ்சி, சிவப்பு நிறமாக மாறிவிடும். ஒருவர் ஒவ்வாமையினால் கேடுற்றிருக்கும்போது அவருடைய இரத்தத்தில் இந்த வகை வெள்ளையணுக்கள் இயல்பை விட அதிக அளவில் அதிகமாகிவிடும். இதைத்தான் பொதுவாக ஈசினோபீலியா என்று அழைக்கிறோம்.
ஆனால் அதேசமயம், அதே நோயாளி வேறு சில ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவருடைய இரத்தத்தில் ஈசினோபில்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் என்பதை நாம் அறியவேண்டும். இந்த ஒட்டுண்ணிகளில் ஒருவகையான தட்டைப் புழுவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சில சமயங்களில் ஒவ்வாமை உண்டாகி, ஆஸ்துமா இழுப்பும் வந்துவிடும்.
இவைதவிர, இரத்தத்தில் ஒவ்வாமை தொடர்பான மற்ற பரிசோதனைகளான ராஸ்ட் (RAST Radio Allergo Sorbent test) எனப்படும் முக்கியமான மிரீணி என்ற எதிர்ப்பொருட்களின் எண்ணிக்கை, நோயெதிர்ப்புச் செறிவுச் சோதனை ஊநீர் புரதச் சோதனை, இரத்தத்தில் திசு நீர்த் தேக்கி வினை குறைப்பணுக்கள் உயிரணு நச்சுப் பரிசோதனை மற்றும் சிறுநீர், மலம் போன்ற பரிசோதனைகளையும் ஒவ்வாமை இயல்புடையவருக்குச் செய்ய வேண்டும்.
எலும்புக் காற்றறை, மார்பு ஊடுகதிர்ப்படங்கள், தோல் ஒவ்வாமை இருப்பவர்களுக்குத் தேவைப்பட்டால் தோல்திசு ஆய்வு (Skin biopsy) போன்றனவும் சில நேரங்களில் செய்ய வேண்டியிருக்கும் என்பதை நாம் இங்கு தெரிந்து கொள்ளவேண்டும்.
சில நேரங்களில் ஒவ்வாமை இயல்புடையவர், சுவாசம் தொடர்பான நோய்கள் கண்டிருந்தால், குறிப்பாக அவர்களுக்கு சுவாச இயக்கப் பரிசோதனைகளுடன் (pulmonary Function Test PFT) தோலில் செய்யக்கூடிய முக்கியமான ஒவ்வாமைத் தோல் பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அலர்ஜி டெஸ்ட் எனப்படும் ஒவ்வாமைத் தோல் பரிசோதனை என்றால் என்ன?
பொதுவாக தும்மல் நோய், விஷக்கடி போன்ற பல்வேறு ஒவ்வாமை நோய்களைக் கொண்ட ஒவ்வாமை தன்மையுடையோருக்கும், அதிலும் குறிப்பாக ஒவ்வாமையினால் ஆஸ்துமா இழுப்பு வரக் கூடியவர்களுக்கும், அவர்களுக்கான ஒவ்வாப் பொருட்களைக் கண்டறிய, தோலின் மேலோட்டமாகச் செய்யப்படும் பரிசோதனையே ஒவ்வாமைத் தோல் பரிசோதனை என்பதாகும். இதுதான் அனைவராலும் அலர்ஜி டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
என்னென்ன பொருட்களுக்குச் செய்ய வேண்டும்?
இந்த முக்கியமான பரிசோதனையைச் செய்வதற்காக, நாம் சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளக் கூடிய பல வகையான சந்தேகிக்கப்படும் ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய பொருட்களின் கிருமி நீக்கம் செய்யப்பட்ட, சுத்தமான கரைசல்களை (Diagnostic Allergens) ஒவ்வாமை நிபுணர்கள் தயாராக வைத்திருப்பார்கள். இவற்றுள் முக்கியமானவை பல்வேறு தாவரங்களின் மகரந்தங்கள், காளான்கள், தூசிகள், மர வகைகள், பார்த்தீனியம் போன்ற தாவரங்கள், இலைகள், பூச்சிகள், செல்லப் பிராணிகளின் எச்சங்கள், ரோமங்கள், சிறகுகள் மற்றும் சைவ, அசைவ உணவுப் பொருட்கள், பழ வகைகள் போன்றவையாகும். இதிலும் மிக முக்கியமானது, வீட்டுத்தூசி உண்ணி (House Dust Mite) அல்லது பூச்சியின் கழிவுப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறப்புக் கரைசல்தான்!
எப்படிப் பரிசோதனைப் பொருட்களைப் பாதுகாக்கிறார்கள்?
பல்வேறு ஒவ்வாமை நோய்களைக் கண்டறியப் பயன்படும் இந்த முக்கியமான தோல் பரிசோதனையைச் செய்ய, இது போன்ற சுமார் 250 வகையான ஒவ்வாப் பொருட்களின் கரைசல்களைத் தனித்தனியாக, அவற்றின் வீரியம் குறையாவண்ணம் கெடாமல் குளிர்சாதனப் பெட்டியில் குளிர்சங்கிலிப் பாதுகாப்பு முறையில் (2/8CCold Chain Maintenance) எங்களைப் போன்ற ஒவ்வாமை _ ஆஸ்துமா _ அக்குபங்சர் சிறப்பு மருத்துவர்கள், தங்களின் முதலுதவி வசதிகள் பெற்ற மருத்துவமனைகளில் எந்நேரமும், பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.
எங்கு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளக்கூடாது?
கண்ட மருத்துவக் கூடங்கள், இதில் அனுபவமும், பயிற்சியும், பதிவும் பெறாத மருத்துவர்கள், போதிய முதலுதவி வசதிகள் இல்லாத மருத்துவமனைகள் போன்றவற்றில் இந்த வகையான ஒவ்வாமை தோல் பரிசோதனைகளைச் செய்துகொள்வதைக்கட்டாயம் ஒவ்வாமைக் கண்டவர்கள் தவிர்க்க வேண்டும்.
எத்தனை செய்ய வேண்டும்?
ஒரு குறிப்பிட்ட ஒவ்வாமை நோயாளிக்கு, என்னென்ன ஒவ்வாப் பொருட்களினால் ஒவ்வாமைக் கேடுகள் அல்லது நோய் அறிகுறிகள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளன என்பது பற்றி, ஒவ்வாமை மருத்துவரும், நோயாளியும் நன்கு கலந்துரையாடி, பல வகையான ஒவ்வாப் பொருட்களில், ஒருவருக்குக் காரணமாகக் கருதக்கூடிய, ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு எண்ணிக்கையுள்ள சுமார் 50_70 வரையிலான அன்றாடம் எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான ஒவ்வாப் பொருட்களை மட்டுமாவது சோதனைக்குத் தேர்வு செய்து கொள்ளவேண்டும்.
உடலின் எந்தப் பகுதியில் செய்ய வேண்டும்?
பொதுவாக, இப்பரிசோதனைகளை ஒவ்வாமையுள்ள பெண் நோயாளிகளுக்கு முழங்கைகளுக்குக் கீழ் இரு முன்கைகளின் கீழ்புறத்திலும், ஆண் மற்றும் சிறுவர்களுக்கு மேல்புற முதுகிலும், கைகளிலும் 10_15 நிமிடங்களுக்குள் பரிசோதித்துவிடலாம்.
எப்படி செய்ய வேண்டும்?
ஒவ்வாப் பொருட்களின் கரைசலின் ஒரே ஒரு துளியை, ஒவ்வொன்றாக எடுத்துத் தோலின் மேல்விட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்ட கூர்மையான சிறிய குச்சி (Sterilised Tooth Prick) கொண்டு தேய்த்துப் பரிசோதிக்கும் சோதனை (Scratch Allergens Test) மூலமும், ஒவ்வாப் பொருட்களின் கரைசல்கள் கொண்ட தோல் ஒட்டும் துணி மூலமும் (Patch test). ஒவ்வொன்றாகக் கிருமி நீக்கம் செய்யப்பட்ட சின்னஞ்சிறிய ஊசிகளைக் கொண்டு மிகவும் லேசாகக் குத்திப் பரிசோதிக்கும் சோதனை (prick test) மூலமும். ஒரே சமயத்தில் பல ஊசிமுனைகளைக் கொண்டு (Multi Test Applicator) தோலின் மேலோட்டமாகக் குத்தி அல்லது ஊடுருவிப் (Prick or puncture) பரிசோதிக்கும் சோதனைகள் மூலமும் ஒவ்வாமை உண்டாக்கும் பொருட்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
சந்தேதிக்கும் ஒவ்வொரு ஒவ்வாப் பொருட்களின் கரைசலில் ஒரே ஒரு துளியை (1 cc), சின்னஞ்சிறிய ஒரு முறை பயன்படுத்தும் (Disposable) 1 மி.லி. இன்சுலின் ஊசி கொண்டு குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் சாதாரண மாகக் காசநோய்த் தாக்கம் அறியச் செய்யும் மேன்டு (Mantoux text) பரிசோதனை போல் தோலினூடே செலுத்திப் பரிசோதிக்கும் தோல் ஒவ்வாமைப் பரிசோதனை (Endermal or Intradermal Allergen Test)) கொண்டும் ஒவ்வாப் பொருட்கள் எவை எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இவை போன்ற ஐந்து விதமான ஒவ்வாமைத் தோல் பரிசோதனைகளில், மிக முக்கியமானது மூன்றாவதாகக் குறிப்பிட்ட, மிகவும் லேசாகக் குத்திப்பரிசோதிக்கும் சோதனை (prick test)) தான் மிக முக்கியம். மற்ற நான்கு வகையான தோல் பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்க முடியாத ஒவ்வாப் பொருட்களை, இச்சோதனை மூலம் எளிதில் கண்டறிந்து உறுதி செய்துவிடலாம்.
தூண்டும் பரிசோதனையா? அப்படி என்றால் என்ன?
சில வகை ஒவ்வாமை நோயாளிகளுக்கு இத்தோல் பரிசோதனைகளுடன், ஒவ்வாமை உண்டாக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக நேரடியாக நுண்துகள்களாக (Spray) கண், காது, மூக்கு மற்றும் மூச்சுக் குழாய்களுக்குள் கவனமுடன் செலுத்திப் பார்த்து (Provocative Test), அவர்களுக்கான ஒவ்வாப் பொருட்கள் எவை எவை என்றும் ஒப்பிட்டுக் கண்டறிந்து உறுதி செய்யலாம். இப்பரிசோதனைக்குக் கிளறும் அல்லது ஒவ்வாமையைத் தூண்டும் பரிசோதனை என்று பெயர். தீவிர சிகிச்சைப் பிரிவு கொண்ட பெரிய மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக் கூடங்களில் மட்டுமே இச்சோதனையைக் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
தோல் பரிசோதனைக்குப் பின் கவனம்:
இவ்வாறு தோல் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், 15_30 நிமிடங்களுக்குள், ஒவ்வாப் பொருட்கள் தோலின் மேல் அல்லது தோலின் ஊடே செலுத்தப்பட்ட இடங்கள் சிவந்தும், தடித்தும் (Erythema. Wheal) விடுவதைக் காணலாம். இவ்விடங்களை, இதற்கென்றே சிறப்பு அளவு கோலின் (Skin Test Reaction Gauge) முறைப்படி அளந்து, எவையெவை அந்தக் குறிப்பிட்ட மேற்கொண்ட 6, 24, 72 மணி நேரங்களில், பரிசோதிக்கப்பட்டஇடங்களில் வீக்கம், நமைச்சல் மற்றும் வலி ஏதேனும் இருக்கிறதா என்பதை ஒவ்வாமை நோயாளிகளோ, அவர் நலம் விரும்பிகளோ கண்டறிந்து ஒவ்வாமை மருத்துவரிடம் தெரிவிக்கலாம். தோல் பரிசோதனை செய்யப்பட்ட தடித்த, சிவந்த இடங்கள் சில மணி நேரங்களிலேயே மறைந்து விடுவதால், இச்சோதனையால் மட்டும் அன்றாடப் பணிகளுக்கு எந்தவிதமான இடையூறும் நேராது என்பதைத் தெளிவாக ஒவ்வொரு ஒவ்வாமை நோயாளியும் அறிய வேண்டும்.
தோல் பரிசோதனைக்கு முன் கவனம்
ஆனால், தோல் பரிசோதனைகளை மேற் கொள்வதற்கு 2_3 நாட்களுக்கு, ஒவ்வாமையைக் கட்டுப் படுத்தக் கொடுக்கப்படும் மாத்திரைகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும். ஒவ்வாமையுடையோர் அப்போதைக்கு அத்தொந்தரவுகள் அதிகம் இல்லாமலும், குறிப்பாக ஆஸ்துமா இழுப்பு இல்லாமலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இதற்காக ஒவ்வாமை மருத்துவர் மேற்பார்வையில் மேல் பூச்சு மருந்துகள் ஆஸ்துமா உள்ளிழுப்பான்கள், மூச்சுக் குழல் விரிவாக்க மாத்திரைகள் (Bronchodilators) போன்றவற்றை எப்போதும் போல் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
தோல் பரிசோதனை செய்யும்போது கவனிக்க வேண்டியவை
ஸ்டீராய்டு மாத்திரைகள் தினந்தோறும் பயன்படுத்தியே ஆக வேண்டிய ஸ்டீராய்டு மாத்திரைகள் சார்ந்த ஆஸ்துமா நோயாளிகளுக்கு (Steroid Dependent Asthmatcatucs) , இவ்வகையான ஒவ்வாமை தோல் பரிசோதனைகளை மிகவும் கவனமுடனும், தேவைப் பட்டால் மட்டுமே மேற்கொள்வது நல்லது. இதே போல், இப்பரிசோதனைகளை உட்கார்ந்தும், நின்று கொண்டும் செய்து கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். அரிதாக சில நேரங்களில் சில ஒவ்வாமை நோயாளிகளுக்கு பயத்தாலும், ஒவ்வாப் பொருட்களின் கரைசல்களாலும், வழக்கத்தைவிட அதிக வியர்வை, நெஞ்சு படபடப்பு, மயக்கம் மற்றும் சில நேரங்களில் அதிர்ச்சியும் (Anaphylaxis) ஏற்படலாம். எனவேதான் இவற்றையெல்லாம் காலதாமதமின்றி நேரத்துடன் அவசர சிகிச்சை முறைகளை மேற்கொள்ள, ஒவ்வாமை மருத்துவர் முன்னேற்பாடாக, தமது மருத்துவமனைகளில் போதிய வசதிகளைச் செய்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். Dysprotenemia எனப்படும் ஒரு வகைப் புரதமின்மை, சில ஒவ்வாமை நோயாளிகளுக்கு மட்டுமே அரிதாக ஏற்படுவதாகத் தெரிகிறது.
தோல் பரிசோதனை முடிவுகள்
எப்போதாவது, சில சமயங்களில் வெகுசில ஒவ்வாமை நோயாளிகளுக்கு மட்டும் தோல் ஒவ்வாமைப் பரிசோதனைகளின் போது, ஒவ்வாமையாக இருக்கும் என்று சந்தேகப்படும் ஒவ்வாப் பொருள், அதிகத் தடிப்பு, வீக்கம் போன்றவற்றை உண்டாக்காமலும் (False Negative Reaction), தமக்கு இப்பொருள் ஒவ்வாமையற்றது என்று உறுதியாக எண்ணிக் கொண்டிருப்பது அதிகத் தடிப்பு, வீக்கத்தை (False Positive) உண்டாக்கியும் விடும் என்பதை இங்கு நாம் மிகுந்த கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக, உணவுப் பொருட்களின் ஒவ்வாமையைப் பரிசோதித்து முடிவு தெரிந்து கொள்ளும் போது, ஒவ்வாமையுடையவர் ஏற்கனவே அந்த உணவுப் பொருளை உண்ணும்போது, ஒவ்வாமைத் தொல்லைகள் அதிகமாகத் தெரிகின்றதா என்பதைப் பற்றி ஒவ்வாமை மருத்துவர், நோயாளி கலந்துரையாடுவது எப்போதும் நல்ல பயன்தரும் முயற்சியாகும். இதுபோல் நேரம் அதிகமானாலும் ஒவ்வொரு ஒவ்வாப் பொருளுக்கும் ஒவ்வாமை அறிகுறிகளுக்கும் உள்ள தொடர்பையும் அறிவது மிகவும் நல்லது.
சிறிது உராய்ந்தாலும், கீறினாலும், லேசாக அடிபட்டாலும் தோலில் அந்தந்த இடங்களில் தானாக அதிகத் தடிப்பாகும் நிலையான தோல் வரைவியல் அல்லது கீறல் தழும்பு எனப்படும். ஒரு வகை தோல் பாதிப்பு கொண்ட ஒவ்வாமை நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது ஓர் ஒவ்வாமை மருத்துவருக்கு அதிகக் கவனமும், பொறுப்பும் தேவைப்படுகின்றன.
காலம் முழுவதும் துன்பத்தைக் கொடுக்கவல்ல ஒவ்வாமைக் கேடுகளைப் பார்க்கும்போது, எப்போதாவது, யாருக்காவது ஏற்படும் இது போன்ற விரும்பத்தகாத விளைவுகளைப் பற்றி அதிகக் கவனமும், பயமும் கொள்ள வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது!
ஒவ்வாமை கூருணர்ச்சிக் குறைப்பு ஊசிகள் அல்லது அலர்ஜி தடுப்பூசிகள்
இவ்வாறு, பல்வேறு ஒவ்வாமைக்கேடுகள் உண்டாகக் காரணங்களான, ஒவ்வாமைப் பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்து பின்னர், தவிர்க்கக் கூடிய ஒவ்வாப் பொருட்களைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.
அப்படியும் தவிர்க்க அல்லது ஒதுக்க முடியாத, மிகவும் அவசியமான அந்தந்த ஒவ்வாமை நோய் அறிகுறிகளுக்குக் காரணமான, ஒவ்வாப் பொருட்களுக்கு மட்டும் ஒவ்வாமை கூருணர்ச்சிக் குறைப்பை உண்டாக்கும் சிகிச்சையை (Desensitisation or Hyposensitisation or Immunotherapy) மேற்கொள்வது நல்ல பயன் தரும் முயற்சியாகும்Thanks to : ஈகரை
